ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் இருதரப்பு பயண ஏற்பாடு தொடக்கம்

ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் இரு தரப்பு பயண ஏற்பாடு தொடங்கியுள்ளது.

குடும்பத்தினரும் நண்பர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் மிகவும் ஊக்கத்துடன், மன எழுச்சியுடன், நெடுநாட்களுக்குப் பிறகு முதன்முதலாகச் சந்தித்து கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

சிட்னியிலிருந்து நியூசிலாந்துக்கு விமானத்தில் புறப்பட்ட பலரும் விவரிக்க முடியாத அளவுக்குப் பரபரப்புடன் காணப்பட்டனர்.

தங் களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் ஏறக்குறைய 400 நாட்களில் முதன்முறையாக இரு நாடுகளுக்கும் இடையில் மக்கள் பயணம் செய்ய இப்போது வசதி ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஓராண்டுக்கு முன் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோருக்கு எல்லைகளை மூடிவிட்டன. அந்த நாடுகளில் கொவிட்-19 தொற்று இப்போது குறைந்து இருக்கிறது.

இப்போது எல்லைகள் திறக்கப்பட்டு இருப்பதால் ஆயிரக்கணக்கான குடும்பத்தினரும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!