ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கு; போலிஸ் அதிகாரி குற்றவாளி

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கு; போலிஸ் அதிகாரி குற்றவாளி

1 mins read
8f0179b1-44d6-473b-a735-cfb057f52960
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க கறுப்­பி­னத்­த­வ­ரான திரு ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்­கில் முன்­னாள் போலிஸ் அதி­காரி டெரிக் சாவின் குற்­ற­வாளி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. மூன்று வாரங்­கள் நடந்த விசா­ர­ணை­யில் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள், போலிஸ் அதி­கா­ரி­கள், மருத்­துவ நிபு­ணர்­கள் என 45 பேர் சாட்­சி­யம் அளித்­த­னர். 2020ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி­யன்று போலி 20 டாலர் நோட்­டைப் பயன்­ப­டுத்தி மளி­கைக் கடை ஒன்­றில் 46 வயது திரு ஃபிளாய்ட் சிக­ரெட் வாங்­கி­ய­தா­கக் கூறி அவரை சாவி­னும் அவ­ரு­டன் இருந்த மூன்று போலிஸ் அதி­கா­ரி­களும் கைது செய்­த­னர். வெள்­ளைக்­கா­ர­ரான சாவின், கிட்­டத்­தட்ட ஒன்­பது நிமி­டங்­க­ளுக்கு திரு ஃபிளாய்ட்­டின் கழுத்­தின் மேல் தமது முழங்­காலை வைத்து அழுத்­தி­ய­தைக் காணொளி காட்­டி­யது.

அப்­போது திரு ஃபிளாய்ட்­டின் கைக­ளுக்கு விலங்கு மாட்­டப்­பட்­டி­ருந்­தது. சம்­ப­வத்­தின்­போது திரு ஃபிளாய்ட், அம்­மா என கதறி அழு­ததை, தம்­மால் மூச்சு­விட முடி­ய­வில்லை என்று போலிஸ் அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­ய­தைக் காணொ­ளி­யில் காண முடிந்­தது. அந்­தக் காணொ­ளியை சம்­ப­வத்தை நேரில் கண்ட பதின்­ம­வ­ய­தி­ன­ரான டார்­னெலா ஃபிரேசி­யர் எடுத்­தார். தீர்ப்பு குறித்து திரு ஃபிளாய்ட்­டின் இளைய சகோ­த­ரர் திரு ஃபிளோனிஸ் பிளாய்ட், "இன்று எங்களுக்கு நியாயம் கிடைத்து விட்டது," என மகிழ்ச்சி தெரி­வித்­தார்.