நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி தீவிரம்; சிங்கப்பூரும் கைகொடுக்கிறது

நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி தீவிரம்; சிங்கப்பூரும் கைகொடுக்கிறது

2 mins read
d88f6d7c-ff1e-41c6-808c-b7ced55f049c
சிங்கப்பூர் கடற்படைத் தளபதியிடம் இந்தோனீசியா உதவி கேட்டதால் சிங்கப்பூர் கடற்படையின் 'எம்வி ஸ்விஃப்ட்' புதன்கிழமை மதியம் சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவை நோக்கிப் புறப்பட்டதாக ஃபேஸ்புக் பதிவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருந்தார். கப்பலுடன் மருத்துவக் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.படம்: டாக்டர் இங் எங் ஹென் -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சிய கடற் ­பகுதி­யில் காணா­மல் போன நீர் மூழ்­கிக் கப்­ப­லைத் தேடும் பணி தீவி­ர­மாக்­கப்­பட்­டுள்­ளது.

உல்­லா­சத் தீவான பாலிக்கு அருகே அந்த நீர்மூழ்­கிக் கப்­பல் 53 பேருடன் காணா­மல் போனது.

ஐந்து இந்­தோ­னீ­சிய போர்க் கப்­பல்­களும் ஒரு ஹெலி­காப்­ட­ரும் தண்­ணீரை சல்­ல­டை­யா­கச் சலித்­துத் தேடி வரு­கின்­றன.

பாலிக்­குத் தெற்கே 23 கடல் மைல் தொலை­வில் கப்­பல் கடை­சி­யா­கக் காணப்­பட்­டது என்று இந்­தோ­னீ­சிய ராணு­வப் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறினார்.

அந்த இடத்­தைச் சுற்றி தேடும் பணி தொடர்ந்து நடை­பெற்று வரு வதாக பாலி ராணு­வத் தளத்­தில் நடைெபற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய மேஜர் ஜென­ரல் அச்­மட் ரியாட் கூறினார்.

'கேஆர்ஐ நங்­காலா-402' எனும் அந்த நீர்மூழ்­கிக் கப்­பல் பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது நீரில் மூழ்க அனு­மதி கேட்­டது.

அதன் பிறகு அதன் தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது. புதன்­கி­ழமை நடந்த சம்­ப­வத்­தில் நீர் மூழ்­கிக் கப்­பல் மேலே வரா­த­தால் சிறிது நேரத்­தி­லேயே தேடும் பணி முடுக்கி­ வி­டப்­பட்­டதாகவும் மேஜர் ஜென­ரல் அச்­மட் சொன்­னார்.

"அதே பகு­தி­யில் எண்­ணெய்க் கசிவு இருப்­ப­தைக் காண முடிகிறது. பல இடங்­களில் டீசல் வாசனை வீசு­கிறது. ஆனால் எந்த நீர்மூழ்­கிக் கப்­ப­லி­லி­ருந்து எண்ெணய் கசிந்­துள்ளது என்பதை நிர்ணயிக்க முடி­ய­வில்லை," என்­றார் அவர்.

இதற்­கி­டையே இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம், அனைத்­து­லக உத­விக்கு அழைப்பு விடுத்­த­தால் சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­கள் உத­விக்கு விரைந்­துள்­ளன.

நீர்­மூழ்­கிக் கப்­பலை அனுப்பி சிங்­கப்­பூர் உதவி செய்­ய­வி­ருக்­கிறது என்று மேஜர் ஜென­ரல் அச்­மட் தெரிவித்தார்.

புதன்­கி­ழமை அன்று சாங்கி கடற்­ப­டைத் தளத்­தி­லி­ருந்து புறப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் சிங்­கப்­பூ­ரின் கப்­பல் சனிக்­கி­ழமை இந்­தோ­னீ­சி­யாவை வந்து சேரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வும் உத­விக்கு 'எம்வி மெகா பக்தி' என்ற கப்­பலை அனுப்­பி­யி­ருக்­கிறது. இந்­தக் கப்­பல் நாளை மறுநாள் வர­வி­ருக்­கிறது. அமெ­ரிக்கா, ஜெர்­மனி, ஃபிரான்ஸ், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடு­களும் நீர் மூழ்­கிக் கப்­பலை கண்­டு­பி­டிக்க உத­விக்­ க­ரம் நீட்­டி­யுள்­ளன.