வாஷிங்டன்: மின்னியபொலிஸ் நகர காவல்துறையின் காவல் நடைமுறைகளை மத்திய விசாரணைப் பிரிவு விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த நகரத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிதான் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துக்குப் புறம்பான காவல் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை நீதித் துறை விசாரிக்க வேண்டும் என்று தலைமைச் சட்ட அதிகாரி மெரிக் கார்லாண்ட் வலியுறுத்தியுள்ளார்.
கறுப்பின ஆடவரான ஃபிளாய்டின் கழுத்து மீது முட்டியை வைத்து அழுத்திப் பிடித்ததால் அவர் மூச்சுத் திணறி மாண்டார்.
இந்த வழக்கில் அனைத்துக் குற்றச் சாட்டுகளிலும் காவல்துறை அதிகாரி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது.
இந்த நிலையில் மின்னியபொலிஸ் காவல்துறை விசாரணை வளையத் துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்னியபொலிசில் காவல் துறையின் பயிற்சி, கொள்கைகள், வலுக்கட்டாய விசாரணைகள், மேற்பார்வை உள்ளிட்ட நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப் படும் என்று திரு மெரிக் கார்லாண்ட் தெரிவித்தார்.
"சட்டவிரோதமான நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து பொதுமக்களுக்கு அறிக்கை வெளி யிடப்படும்," என்ற அவர், சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

