மெல்பர்ன்: மெல்பர்ன் நகரில் இந்தியாவைச் சேர்ந்த 66 வயது பாட்டியை எட்டு ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்த வழக்கில் தம்பதியர் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் தடை விதித்திருந்த தால் தம்பதியரின் பெயர் கே.கே மற்றும் கே.கே என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது. அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டதால் திரும ணமான தம்பதியரின் பெயர் குமுதினி கண்ணன், கந்தசாமி கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது.
விக்டோரியா உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தபோது கணவரின் தோளில் சாய்ந்து மனைவி கதறி அழுதார் என '9நியூஸ்' குறிப்பிட்டது.
வேண்டுமென்றே இந்திய மாதை அடிமையாக வைத்திருந்தது, அவருக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தம்பதியர் எதிர்நோக்கினர்.
மவுண்ட் வேவர்லி வீட்டில் பாட்டியை மறைத்து வைத்திருந்த அவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று டாலர் மட்டுமே சம்பளமாக வழங் கினர்.
கடந்த 2007ஆம் ஆண்டில் கண்ணன் வீட்டில் தங்குவதற்காக பாட்டி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்.
தம்பதியரின் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக மெல்பர்ன் நகருக்கு தான் வரவழைக்கப்பட்டதாக ஆரம்பத்தில் நினைத்த தாக அவர் விசாரணை அதிகாரி களிடம் தெரிவித்துள்ளார்.
திருமதி கண்ணனின் உத்தரவு களுக்குக் கீழ் படியாவிட்டால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதையும் அவர் விவரித்திருந்தார்.
"உறைந்துபோன கோழி இறைச்சியை எடுத்து எனது தலையில் அடிப்பார். தூங்கப் போனால் என் மீது வெந்நீரை ஊற்றுவார்," என்று அவர் தெரிவித்தார்.
சில வாரம் விடுமுறையில் சென்றால்கூட பாட்டியை அவர்கள் வீட்டில் பூட்டிவைத்துவிட்டுச் சென்றனர்.
பாட்டியை இந்தியாவுக்கு அனுப்ப தம்பதியர் மறுத்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலிசாருடன் தொடர்பு கொண்டனர்.
அதிகாரிகள் அந்தப்பாட்டியை தேடிக் கண்டுபிடித்தபோது அவர் உடல் மெலிந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அனைத்துப் பற்களையும் இழந்திருந்தார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் தம்பதியருக்கு தண்டனை விதிக்கப் படவிருக்கிறது. கற்றல் குறைபாடு கொண்ட தங்களுடைய குழந்தைகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

