வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மேம்பட்ட உதவி வழங்கப் படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். நிதியுதவியை அதிகரிப்பது, தனியார் துறை முதலீடுகளின் ஆதரவுகளைத் திரட்டுவது மூலம் உதவி வழங்கப்படும் என்றார் அவர்.
"நல்ல யோசனையும் நல்லார்வமும் இருந்தால் மட்டும் போதாது. தனியார் மற்றும் பொதுத் துறையின் நிதியாதரவும் இருக்க வேண்டும்," என்று இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பேசிய பைடன் வலியுறுத்தினார்.
இதில் நாற்பது நாடுகளின் தலைவர்களும் வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
உலகில் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு நாம் அனைவரும் சேர்ந்து உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

