மியன்மார் ராணுவம்-ஆசியான் உடன்பாடு: மக்கள் எதிர்ப்பு

மியன்மார் ராணுவம்-ஆசியான் உடன்பாடு: மக்கள் எதிர்ப்பு

2 mins read
bcfab531-5b51-4d4e-a2eb-e64ac550dcbc
-

யங்­கூன்: மியன்­மா­ரில் வன்­முறையை முடி­விற்­குக் கொண்­டு­வர ஆசி­யான்-மியன்­மார் ராணு­வம் இடையே எட்­டப்­பட்­டுள்ள உடன்­பாட்டுக்கு அந்­நாட்டு மக்­கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

மியன்­மா­ரில் ஜன­நா­ய­கத்தை மீண்­டும் மல­ரச் செய்­ய­வும் நூற்­றுக்­க­ணக்­கான மக்­க­ளைக் கொன்­ற­தற்கு ராணு­வத்­தைப் பொறுப்­பேற்­றுக்­கொள்ள வைக்­க­வும் அந்த உடன்­பாடு தவ­றி­விட்­ட­தாக மியன்­மார் மக்­கள் சாடி­யுள்­ள­னர்.

இந்­தோ­னீ­சி­யத் தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் நேற்று முன்­தி­னம் நடந்த உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில், மியன்­மார் ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைய்ங்­கும் சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் உட்­பட ஆறு ஆசி­யான் நாடு­க­ளின் தலை­வர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

"ஆசி­யா­னின் அறிக்கை, மியன்­மார் ராணு­வத்­தால் துன்­பு­றுத்­தப்­பட்ட, கொல்­லப்­பட்ட, அச்­சு­றுத்­த­லுக்கு ஆளான மக்­க­ளின் முகங்­களில் வி­டப்­பட்ட அறை­போல் இருக்­கிறது," என்று மவ்ச்சி துன் எனும் ஃபேஸ்புக் பய­னா­ளர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அத்­த­கைய மனப்­போக்­கு­ட­னும் அணு­கு­மு­றை­யு­ட­னும் கூடிய ஆசி­யா­னின் உதவி தங்­க­ளுக்­குத் தேவை­யில்லை என்­றும் அவர் கூறி­ இருக்கிறார்.

வன்­மு­றையை முடி­வுக்­குக் கொணர்­தல், எல்­லாத் தரப்­பி­ன­ரு­ட­னும் ஆக்­க­க­ர­மான பேச்­சு­வார்த்தை, அதற்கு வகை­செய்ய சிறப்பு ஆசி­யான் தூதரை நிய­மித்­தல், அத்­தூ­தரை மியன்­மா­ருக்கு வரு­கை­தர அனு­ம­தித்­தல், உத­வி­களை ஏற்­றல் ஆகிய ஐந்து அம்­சங்­களில் உடன்­பாடு எட்­டப்­பட்­ட­தாக ஆசி­யான் அறிக்கை தெரி­வித்­தது.

அர­சி­யல் கைதி­களை விடு­விக்க வேண்­டும் என ஆசி­யான் உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போ­தும் அது­கு­றித்து அறிக்­கை­யில் எது­வும் இடம்­பெ­ற­வில்லை.

மியன்­மா­ரில் கடந்த பிப்­ர­வரி 1ஆம் தேதி ஆட்­சி­யைக் கவிழ்த்து, நிர்­வா­கத்தை ராணு­வம் கைப்­பற்­றி­யது. அதன்­பின் நடந்த ஜன­நா­யக ஆத­ர­வுப் போராட்­டங்­களில் 748 பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 3,300க்கும் மேற்­பட்­டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 'அர­சி­யல் கைதி­க­ளுக்­கான உத­விச் சங்­கம்' எனும் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.