கொவிட்-19 மருத்துவமனையில் தீ; 82 பேர் பலி, நூறு பேர் காயம்

கொவிட்-19 மருத்துவமனையில் தீ; 82 பேர் பலி, நூறு பேர் காயம்

1 mins read
2e4990ed-b1f9-4578-b9b7-28faf37fff06
-

பாக்­தாத்: ஈராக் தலை­ந­கர் பாக்­தாத்­தில் உள்ள ஒரு கொவிட்-19 மருத்­து­வ­ம­னை­யில் நேற்று முன்­தினம் இரவு ஏற்­பட்ட தீ விபத்­தில் 82 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

ஆக்­சி­ஜன் கலன் வெடித்ததால் தீ விபத்து நிகழ்ந்ததாக மருத்­துவ வட்­டா­ரங்­க­ளைச் சுட்டி 'ஏஎ­ஃப்பி' செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வி­பத்­தில் நூற்றுக்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­தா­கப் பாது­காப்­புப் படை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. சம்­பவ இடத்­தி­ல் இ­ருந்து 90க்கும் மேற்­பட்­டோரை மீட்­ட­தா­கக் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

மீட்­கப்­பட்ட நோயா­ளி­கள் அனை­வ­ரும் அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

இச்­சம்­ப­வம் குறித்து விசா­ரிக்க ஓர் ஆணை­யத்தை அமைக்­கு­மாறு சுகா­தார அமைச்­சுக்கு அழைப்பு விடுத்­துள்ள பாக்­தாத் ஆளு­நர் முகம்­மது ஜாபர், அதன்­மூ­லம் தங்­களது பணி­யைச் சரி­யா­கச் செய்­யா­த­வர்­களை நீதி­யின்­முன் நிறுத்த முடி­யும் என்­றும் கூறி­யுள்­ளார்.

இத­னி­டையே, சுகா­தார அமைச்­சி­டம் தங்­க­ளது உயிரை ஒப்­ப­டைத்த கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட குற்­றம் என ஈராக் மனித உரிமை ஆணை­யம் குறிப்­பிட்­டுள்­ளது. சுகா­தார அமைச்­சர் ஹசன் அல் தமிமியைப் பத­விநீக்கம் செய்து, நீதி­யின்­முன் நிறுத்து­மாறு பிர­த­மர் முஸ்­தஃபா அல் கதெ­மியை ஆணை­யம் வலி­யு­றுத்தி இருக்­கிறது.

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் ஈராக்கில் முதன்­மு­த­லாக கொவிட்-19 பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டது. இது­வரை அங்கு 1,025,288 பேரை கொரோனா தொற்­றி­விட்­ட­தா­க­வும் அவர்­களில் 15,217 பேர் இறந்­து­விட்­ட­தா­க­வும் சுகா­தார அமைச்­சின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.