தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதி: ஜோகூர் பரிசீலனை

தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதி: ஜோகூர் பரிசீலனை

1 mins read
24ee96b7-70f7-495f-8b39-3645fe6c6d62
-

இஸ்கந்தர் புத்ரி: சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மலே­சிய ஊழி­யர்­களை, குறிப்­பாக நோன்­புப் பெரு­நா­ளைக் கொண்­டாட நாடு திரும்ப அனு­மதிப்­பது குறித்து ஜோகூர் மாநில அரசு ஆராய்ந்து வரு­கிறது.

"சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மலே­சிய ஊழி­யர்­களுக்­குச் சிறப்பு வழித்­தட அனு­மதி வழங்­கப்­ப­ட­லாம்," என்று ஜோகூர் முத­லீடு, தொழில்­மு­னை­வர் மேம்­பாடு, கூட்­டு­றவு, மனி­த­வ­ளக் குழு­வின் தலை­வர் முகம்­மது இசார் அக­மது கூறி­ய­தாக 'தி ஸ்டார்' செய்தி வெளி­யிட்­டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­க­ளுக்­குள் வரு­வோ­ருக்­கும் அந்­தத் தளர்வு வழங்­கப்­படுமா என்­பது குறித்­துக் கலந்­தா­லோ­சிக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் அவர் சொன்­னார்.

"ஜோகூர் மக்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆகை­யால், சிங்­கப்­பூ­ரு­ட­னான எல்­லைத் திறப்பு உடன்­பாட்­டைப் பூர்த்தி செய்­ய ஏதுவாக தடுப்­பூசி போடுவதை விரை­வு­படுத்துவதற்கான நடவடிக்கையை ஜோகூர் எடுத்து வரு­கிறது," என்­றார் திரு இசார்.

இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் அடுத்த மாதத் தொடக்­கத்­தில் மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னும் சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வர் என எதிர்­பார்க்­கப்­படு­வதா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.