பாலி: கடலுக்குள் மூழ்கி, உடைந்துபோன கேஆர்ஐ நங்காலா-402 நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்களையும் அந்த விபத்தில் உயிரிழந்த 53 பேரின் சடலங்களையும் அனைத்துலக அமைப்புகள் நிபுணர்களின் உதவியுடன் எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஆலோசனையில் நேற்று இந்தோனீசிய கடற்படை ஈடுபட்டதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த புதன்கிழமை கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த நீர்மூழ்கிக் கப்பல், கடலுக்கடியில் கிட்டத்தட்ட 850 மீட்டர் ஆழத்தில் தரையில் குறைந்தது மூன்று பாகங்களாக உடைந்து கிடந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் உறவினர்களை இழந்தவர்கள் நேற்று பாலி கடற்கரையில் கூடி உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நீர்மூழ்கிக் கப்பலை மேலே கொண்டு வருவது மிகவும் சவாலான காரியம் என்றும் சிறப்பு உபகரணங்கள் தேவைப்படும் எனவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்த அதிபர் ஜோக்கோ விடோடோ,
உயிரிழந்த அதிகாரிகளின் பிள்ளை
களுடைய கல்விச் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றார்.

