பேங்காக்: தாய்லாந்தில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் முடக்கநிலை நடை
முறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா
கிருமிப் பரவல் மோசமடைந்திருப்பதால் தடுப்பூசி போடும் திட்டத்தை தாய்லாந்து மறுபரிசீலனை செய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கொரோனா கிருமித்தொற்று காரணமாக மேலும் 15 பேர்
உயிரிழந்தனர்.
கொவிட்-19 தலைதூக்கிய
திலிருந்து இதுவே தாய்லாந்தில் பதிவான ஆக அதிகமான
அன்றாட மரண எண்ணிக்கை.
இதுவரை கொவிட்-19 காரணமாக தாய்லாந்தில் 163 பேர் மாண்டு விட்டனர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியுள்ளது.
தாய்லாந்து மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதை விரைவுப்படுத்துவது குறித்து தொழிற்துறை அமைப்புகளுடன் தாய்லாந்துப் பிரதமர் பிராயுட் சான் ஓ சா கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுவரை தாய்லாந்து மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாண்டு இறுதிக்குள்
மக்கள்தொகையில் பாதி பேருக்கு தடுப்பூசி போட தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஊழியர்களுக்குத் தேவையான தடுப்பூசியைத் தனியார் நிறுவனங்கள் வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அறியப்படுகிறது.
தலைநகர் பேங்காக்கில் இரவுவிடுதிகளில் கிருமிப் பரவல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனை
களுக்கும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வர்த்தகங்கள், பயணங்கள் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர்
பிராயுட்டுக்கு நெருக்குதல் அளிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் படுக்கைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களை சிகிச்சை அளிக்கும் இடங்களாக மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
தலைநகர் பேங்காக்கில் முடக்கநிலையை அறிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.