கோலாலம்பூர்: கொவிட்-19 நெருக்கடிநிலையால் கடந்த ஆண்டு எரிபொருள் விலை வெகுவாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து எண்ணெய், எரிவாயுத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க பத்தாண்டுத் திட்டத்தை மலேசியா அறிவித்துள்ளது.
எண்ணெய், எரிவாயுத் துறையைச் சேர்ந்த 4,000 நிறுவனங்களில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் நொடித்துப்போனதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

