மலேசியாவில் விரும்புவோருக்கு மட்டும் ஆஸ்ட்ராஸெனகா

மலேசியாவில் விரும்புவோருக்கு மட்டும் ஆஸ்ட்ராஸெனகா

2 mins read
1e37458d-4717-4e91-a6c6-2603f6b62b3b
-

புத்­ரா­ஜெயா: ஆஸ்ட்­ரா­ஸெ­னகா கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பில் ரத்­தக் கட்டி பிரச்­சி­னை­கள் எழுந்­துள்­ள­தை­ய­டுத்து, கோலா­லம்­பூர், சிலாங்­கூ­ரில் உள்ள சில சிறப்பு தடுப்­பூசி நிலை­யங்­களில் அந்­தத் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள விரும்­பு­வோ­ருக்கு மட்­டுமே அது போடப்­படும் என்று அறி­வி­யல் அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் குறிப்­பிட்­டார். இதன் மூலம் மலே­சி­யா­வின் முக்­கிய தடுப்­பூ­சித் திட்­டத்­தி­லி­ருந்து அந்­தத் தடுப்­பூசி விடு­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறினார்.

மலே­சி­யா­வில் தற்­போது 268,000 தடவை போடக்­கூ­டிய அள­வுக்கு ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூசி உள்­ளது. கடந்த வாரம் மலே­சி­யா­வுக்கு அது சென்று சேர்ந்­தது. அனைத்­து­லக அள­வில் இந்­தத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஒரு மில்­லி­யன் மக்­களில் நான்கு பேருக்கு மட்­டுமே ரத்­தக் கட்டி பிரச்­சினை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக திரு கைரி கூறினார்.

புதிதாக 3,142 பேருக்குத் தொற்று

நேற்று மலே­சி­யா­வில் மேலும் 3,142 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தை­ய­டுத்து அங்கு தொற்று கண்­டோ­ரின் எண்­ணிக்கை 401,593 ஆக அதி­க­ரித்­தது. சிலாங்­கூ­ரில் ஆக அதி­க­மாக 1,019 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா குறிப்­பிட்­டார். நேற்று அங்கு கொரோனா தொற்­றால் 15 பேர் உயி­ரி­ழந்­ததை அடுத்து அங்கு உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்கை 1,477 ஆனது.

மேலும் அதிக பள்ளிகள் மூடல்

இதற்­கி­டையே, மலே­சி­யா­வின் சிலாங்­கூ­ரில் நேற்று மேலும் 30 பள்­ளி­கள் கொரோனா தொற்று கார­ண­மாக இரு நாள்­க­ளுக்கு மூடப்­பட்­ட­தாக சிலாங்­கூர் கல்­வித் துறை தெரி­வித்­தது. பள்­ளி­க­ளைக் கிரு­மி­நா­சினி கொண்டு சுத்­தி­க­ரிக்­க­வும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காண­வும் பள்­ளி­கள் மூடப்­ப­டு­வது உத­வும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது. நெகிரி செம்­பி­லா­னி­லும் 13 பள்­ளி­கள் இரு நாள்­க­ளுக்கு மூடப்

­ப­டு­வ­தா­க­வும் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.