தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'விடுதலைக்குப் பிறகு பேச்சுவார்த்தை'

1 mins read
3661ebab-d33f-44ec-ad4b-b9d0212a1fd8
-

யங்­கூன்: அதி­பர் யு வின் மயின்ட், திரு­வாட்டி ஆங் சான் சூச்சி உட்­பட அர­சி­யல் கைதி­களை எந்த நிபந்­த­னை­யு­மின்றி ராணு­வம் விடு­விக்­கும் வரை பேச்­சு­வார்த்­தைக்கு இணங்­கப் போவ­தில்லை என தேர்­த­லில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட மியன்­மா­ரின் தேசிய ஒரு­மைப்­பாட்டு அர­சாங்­கம் ஆசி­யான் அமைப்­பி­டம் தெரி­வித்­துள்­ளது.

ராணுவ ஆட்­சிக்கு எதி­ராக மியன்­மா­ரில் நடந்து வரும் கல­வ­ரங்­களை முடி­வுக்­குக் கொண்­டு­வர ஆசி­யான் முயற்சி எடுத்து வருகிறது. கடந்த வாரம் ஜகார்த்­தா­வில் நடை­பெற்ற ஆசி­யான் கூட்­டத்­தில் முன்­வைக்­கப்­பட்ட தீர்­வு­களை ராணு­வம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அவை கவ­ன­மா­கப் பரி­சீ­லிக்­கப்­படும் என்று அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட மியன்மார் ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் பின்­னர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, மியன்­மார் ராணு­வத்­தின் மீது கூடு­தல் தடை­களை விதிக்­கு­மாறு அமெ­ரிக்க செனட் உறுப்­பி­னர்­கள் சிலர் நேற்று முன்­தி­னம் அதி­பர் ஜோ பைட­னி­டம் வலி­யு­றுத்­தி­னர். அமெ­ரிக்­கா­வில் உள்ள எரி­பொ­ருள் நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து மியன்­மார் அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­படும் உரி­மைத் தொகையை நிறுத்தி வைப்­பது உள்­ளிட்ட கோரிக்­கை­களை அவர்­கள் முன் வைத்­த­னர். மியன்­மா­ரு­ட­னான தொடர்­பைத் துண்­டிக்­கு­மாறு செவ்­ரான், டோட்­டல் எரி­பொ­ருள் நிறு­வ­னங்­களை மனித உரிமை குழுக்­கள் கேட்­டுக்­கொண்­டன.