மியன்மாரில் 2 ஆகாயப்படைத் தளங்கள் மீது தாக்குதல்

மியன்மாரில் 2 ஆகாயப்படைத் தளங்கள் மீது தாக்குதல்

1 mins read
1576be3b-411c-4628-8f5f-f7aae4cd037d
-

யங்­கூன்: மியன்­மா­ரின் இரண்டு ஆகா­யப்­ப­டைத் தளங்­கள் மீது அடை­யா­ளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்­தத் தாக்­கு­தல்­களுக்கு யாரும் பொறுப்­பேற்­க­வில்லை என­வும் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் மியன்மார் ராணுவம் தெரிவித்தது.

மெக்வே நக­ரின் மத்­தி­யில் உள்ள ஆகா­யப்­ப­டைத் தளத்­தின் மீது நேற்று அதி­காலை வேளை­யில் நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் அவற்றில் மூன்று பண்ணைகளின் மீதும் ஒன்று சாலையின் மீதும் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆகாயப் படைத்தளத்தில் உள்ள கட்டடம் ஒன்று லேசாக பாதிக்கப்பட்டது எனவும் உயிரிழப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

வெடித்­தாக்­கு­தல்­களை அடுத்து அந்த ஆகா­யப்படைத் தளத்­துக்கு வெளியே சாலை­களில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

மெய்­டிலா எனும் இடத்­தில் உள்ள நாட்­டின் முக்­கிய ஆகா­யப்

­ப­டைத் தளத்­தில் ஐந்து ராக்­கெட்­டு­கள் ஏவப்­பட்­ட­தாகவும், சேதம் ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது.

தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யபப்டுவர் எனவும் ராணுவத் தரப்பில் கூறப்பட்டது.

வெடிச்­சத்­தத்­தைத் தொடர்ந்து ராக்­கெட்­டு­கள் சீறிப் பாய்­வது போன்ற சத்­தம் உள்­ள­டக்­கிய காணொளி ஒன்­றை­ அந்­தப் பகு­திக்கு அரு­கில் இருந்த செய்­தி­யா­ளர் தான் வின் லைங் வெளி­யிட்­டார் என்று கூறப்­பட்­டது. ஆனால் அந்­தக் காணொ­ளி­யின் உண்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை என ராய்ட்­டர்ஸ் குறிப்­பிட்­டது.