எல்லையைத் திறக்கிறது போர்ச்சுக்கல்

எல்லையைத் திறக்கிறது போர்ச்சுக்கல்

1 mins read
ed7c69b2-2cff-4da6-9c61-15a31a8a1f1d
-

லிஸ்­பன்: போர்ச்­சுக்­கல் இன்று முதல் ஸ்பெ­யின் நாட்­டுக்­கான தனது எல்­லை­யைத் திறக்­கிறது. கொவிட்-19 கட்­டுப்­பாட்­டுத் தளர்­வின் நான்கு மற்­றும் ஐந்­தா­வது கட்ட நட­வ­டிக்­கை­யாக இது செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அந்­நாட்டு பிர­த­மர் அண்­டோ­னியோ கோஸ்டா தெரி­வித்­தார். கடை­சிக் கட்­டத் தளர்வு திட்­ட­மி­டப்­பட்­ட­தைக் காட்­டி­லும் 48 மணி­நே­ரத்­திற்கு முன்­ன­தா­கவே தொடங்­கு­கிறது என அவர் தெரி­வித்­தார். இதன் மூலம் திரு­ம­ணம், ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சி­கள் போன்­ற­வற்­றுக்­கும் அந்­நாடு அனு­ம­தித்­துள்­ளது. அதே­போல் உள்­ள­ரங்கு மற்­றும் வெளிப்­புற விளை­யாட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏப்­ரல் 19 ஆம் தேதி மூன்­றாம் கட்­டத் தளர்­வில் கடைத்­தொ­கு­தி­கள், உயர்­நி­லைப் பள்­ளி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள், உண­வ­கங்­கள், வெளிப்­புற நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றுக்கு அந்­நாடு அனு­மதி அளித்­தது. வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­கான கட்­டுப்­பாடு தொடர்­வ­தா­க­வும் வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­கள் தங்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­ப­தற்­கான சான்­றி­த­ழைப் பெற்­றி­ருக்­க­வேண்­டும் அல்­லது வருகை தந்­த­பின் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் திரு கோஸ்டா கூறி­னார். தொற்று அதி­க­முள்ள பகு­தி­களில் கட்­டுப்­பா­டு­கள் தொட­ரும் என்­றும் அவர் தெரி­வித்­தார். போர்ச்­சுக்­க­லில் கொவிட்-19 தொற்­றுக்கு சுமார் 17,000 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.