பிரேசிலில் தொற்று மரணங்கள் 400,000ஐத் தாண்டியது

பிரேசிலில் தொற்று மரணங்கள் 400,000ஐத் தாண்டியது

2 mins read
6cbd6fbc-de6e-4188-8565-d3b812a3981b
-

ரியோ டி ஜெனிரோ: பிரே­சி­லில் கொவிட்-19 மர­ணங்­கள் 400,000ஐத் தாண்­டி­விட்டது.

தடுப்­பூசி மருந்து பற்­றாக்­குறை கார­ண­மாக தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை நாடளா­விய முறை­யில் செயல்­ப­டுத்த முடி­யாமல் அந்நாடு தவித்து வருகிறது.

2020ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் இந்த ஆண்­டின் முதல் நான்கு மாதங்­களில் பிரே­சி­லில் ஆக அதிக­மான தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த வியா­ழக்­கி­ழமை மட்­டும் 3,001 தொற்று மர­ணங்­கள் பதி­வா­ன­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்த எண்­ணிக்­கை­யு­டன் சேர்த்து இது­வரை அங்கு 401,186 பேரை கொவிட்-19 தொற்று பலி­வாங்­கி­யுள்­ளது.

அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்த­ப­டி­யாக இங்­கு­தான் அதிக தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

பிரே­சி­லில் 200,000ஆக இருந்த தொற்று மர­ணங்­கள் இரண்டு மாதங்­களில் 300,000 ஆக­வும் அடுத்த ஒரு மாதத்­தில் 400,000 ஆக­வும் அதி­வே­கத்­தில் அதி­க­ரித்­துள்­ளது.

சமூக இடை­வெளி கடை­ப்பி­டிக்­கப்படா­த­தும், அதி­க­மான உரு­மா­றிய கொரோனா கிரு­மிப் பர­வல், இலக்கை எட்­டாத தடுப்­பூசி நட­வ­டிக்கைகள் ஆகி­ய­வையே தொற்று அதி­க­ரிப்­புக்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது. பிரே­சி­லின் 20 மாநி­லங்­களில் 80 விழுக்­காட்டு கொவிட்-19 நோயாளி­கள் தீவிர கண்­கா­ணிப்­புப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வில் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்­துள்­ளதை அடுத்து உல­கில் கொவிட்-19 தடுப்­பூ­சிக்கு கடுமையான பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. அந்நாட்டில் இருந்து தடுப்பூசி மருந்து வரவழைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தடுப்­பூசி பெறு­வ­தற்கு பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை அணு­கி­யுள்­ள­தாக சுகாதார அமைச்சர் மார்சிலோ கொய்ரோகா, அமைச்­ச­ர­வை­யில் நேற்று கூறி­னார்.

சீனாவில் இருந்து வரவேண்டிய தடுப்பூசி மருந்துகள் வந்து சேர்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தடுப்பூசி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று அமைச்சர் மார்சிலோ கூறினார்.

ஜூலை மாத இறு­திக்­குள் 159 மில்­லி­யன் கொரோனா தடுப்­பூசி மருந்­து­களை பல நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்­து­பெறவுள்­ளதாகவும் அவர் கூறினார். பிரேசிலின் பல நக­ரங்­களில் தடுப்­பூசி பற்­றாக்­கு­றை­யால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ருக்கு இரண்­டா­வது தடுப்­பூசி போட­மு­டி­யா­மல் அந்­நாடு தத்­த­ளிக்­கிறது.