கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும்

2 mins read
0aaec04f-4452-440c-9fb3-8574320306c0
-

கோலா­லம்­பூர்: கடந்த இரண்டு வாரங்­க­ளாக மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. இதை­ய­டுத்து, நாட்­டில் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்­டுப்­

பா­டு­கள் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்று மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் அறி­வித்­துள்­ளார்.

அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள மாவட்­டங்­களில் மேலும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்

­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.

அண்­மைய நாட்­களில் தலை

­ந­கர் கோலா­லம்­பூர், சிலாங்­கூர் ஆகிய இடங்­களில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­கரித்­துள்­ளது.

"கொவிட்-19 பாதிப்பு மலே­சி­யா­வி­லும் மற்ற நாடு­க­ளி­லும் அதி­க­ரித்து வரு­கிறது. நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க போது­மா­ன­வையா என்­பதை உறுதி செய்ய இந்த மறு­ப­ரி­சீ­லனை முக்­கி­யம்," என்று பிர­த­மர் முகை­தீன் கூறி­னார். அதி­கம் பாதிக்­கப்­பட்ட இடங்­களை அடை­யா­ளம் காண­வும் கிரு­மிப் பர­வ­லுக்­கான கார­ணங்

­க­ளைக் கண்­டு­பி­டிக்­க­வும் பிரத்­தி­யேக அணு­கு­மு­றை­யைத் தமது அர­சாங்­கம் கடைப்­பி­டித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு நடந்­து­கொள்­ளு­மா­றும் தங்­க­ளை­யும் தங்­கள் குடும்­பத்­தி­ன­ரை­யும் சமூ­கத்­தை­யும் பாது­காக்க கூட்­ட­மான இடங்­க­ளைத் தவிர்க்கு­ மா­றும் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்­றார் திரு

முகை­தீன்.

இதற்­கி­டையே, தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரு­டன் சிலாங்­கூர், பினாங்கு, ஜோகூர், கெடா, சர­வாக் ஆகிய மாநி­லங்­க­ளி­லும் முதல் கட்ட நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வைப் பிறப்­பிக்­கு­மாறு தேசி­யப் பாது­காப்பு மன்­றத்­தி­டம் தமது அமைச்சு பரிந்­துரை செய்­தி­ருப்­ப­தாக மலே­சி­யா­வின் நியூ ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் மலே­சிய சுகா­தார அமைச்­சர் ஆதாம் பாபா தெரி­வித்­தார்.

நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் மேலும் 3,788 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. கடந்த இரண்­டரை மாதங்­களில் இதுவே ஆக அதி­க­மான பாதிப்பு.

கடந்த மாதம் 15ஆம் தேதி­யன்று அன்­றா­டப் பாதிப்பு எண்­ணிக்கை முதல் முறை­யாக 2,000ஐ கடந்­தது. அதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து

அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த மாதம் நடுப்­ப­கு­தி­யில் இருந்த நிலை­யை­விட பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை இரு­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது.

மலே­சி­யா­வில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி கிட்­டத்தட்ட 30,000 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 2,881 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

இதன்­மூ­லம் மலே­சி­யா­வில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 411,594ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து மலே­சி­யா­வில் அவ­ச­ர­நிலை

பிர­க­ட­னம் செய்­யப்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வலை எதிர்­கொள்ள இது உத­வும் என்று மலே­சிய அர­சாங்­கம் கூறு­கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை அவ­ச­ர­நிலை அமல்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­களில் மலே­சி­யா­வில் உயர்­நிலை நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டி­ருந்­தது

பொரு­ளி­யல் பல­வீ­னம் அடை­வது தொடர்­பா­க­வும் வேலை இழப்பு தொடர்­பா­க­வும் கவலை எழுந்­ததை அடுத்து, சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன.

இந்­நி­லை­யில் கொவிட்-19 பாதிப்பு மோச­ம­டைந்து வரு­வ­தால் மாநி­லங்­க­ளி­டையே பய­ணம் செய்ய விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை தொடர்­கிறது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி வட­கி­ழக்கு மாநி­ல­மான கிளந்­தா­னில் மட்­டுமே முழு­மை­யான நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு நடப்­பில் உள்­ளது. மற்ற பல மாநி­லங்­களில் நிபந்­த­னை­க­ளு­ட­னான நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு விதிக்கப் பட்டுள்ளது.