தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையின்மீது இடிந்து விழுந்த ரயில்பாதை மேம்பாலம்; 20 பேர் பலி, பலர் காயம்

1 mins read
667fb3ea-8266-4fb7-93b8-8886c9ad5cc6
மெக்சிகோவில் உடைந்த பாலத்தில் 2 ரயில் பெட்டிகள் தொங்கிக் கொண்டு இருந்ததைக் காண முடிந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப் படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

மெக்­சிகோ சிட்டி: மெக்­சிகோ நக­ரில் பர­ப­ரப்­பான சாலை­யின் மீது மேம்­பால ரயில்­பாதை இடிந்து விழுந்த விபத்­தில் குழந்­தை­கள் உட்­பட 20 பேர் உயி­ரி­ழந்­த­னர், 49 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மெக்­சிகோ நக­ரின் தென்­

கி­ழக்­குப் பகு­தில் அமைந்­துள்ள ஓலி­வோஸ் ரயில் நிலை­யத்­துக்கு அரு­கில் அந்த மேம்­பால ரயில் பாதை சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்த கார்­க­ளின் மீது விழு­வ­தைக் காட்­டும் காணொ­ளி­களை உள்­ளூர் ஊட­கங்­கள் காட்­டின. உள்­ளூர் நேரப்­படி இரவு 10.30 மணி­ய­ள­வில் இந்த விபத்து நிகழ்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இடிந்து விழுந்த பாலத்­தின் கீழே சிக்­கிய கார் ஒன்­றி­லி­ருந்து ஆட­வர் ஒரு­வர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார்.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறும் எழு­வ­ரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.