பமாகோ: மாலியில் மாது ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் தாயும் சேய்களும் நலம் என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மிகவும் அரிதான இந்தச் சம்பவம் பற்றி மொரோக்கோ அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இருபத்தி ஐந்து வயதான ஹலிமா சிஸ்ஸெ எனும் மாது மாலியிலிருந்து மொரோக்கோவுக்கு விமானம் மூலம் மார்ச் மாதம் 30ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதலில் அவரது கருப்பையில் 7 குழந்தைகள் வளர்வதாகக் கூறப்பட்டது. அதன் காரணமாக தாய், சிசுக்களின் ஆரோக்கியம் குறித்த அச்சம் காரணமாக அந்தப் பெண் மொரோக்கோ நாட்டுக்கு பிரசவத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவர் ஐந்து பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் ஈன்றார் என்று மாலியின் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அந்தப் பெண்ணை மருத்துவ
மனைக்கு அழைத்துச் சென்றபோது அவரது மருத்துவரும் உடன் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாயும் பிள்ளைகளும் சொந்த ஊருக்குத் திரும்ப இன்னும் சில காலம் பிடிக்கும் என்று மாலியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.