கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி தொடர்பாக முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், சில வங்கிகள், பல்வேறு நிறுவனங்கள் உட்பட குறிப்பிட்ட சில தரப்பினரிடமிருந்து 96.6 பில்லியன் ரிங்கிட் ($31.4 பில்லியன்) பணத்தை மலேசியா திருப்பிக் கேட்கிறது. 1எம்டிபி மோசடியில் கிட்டத்தட்ட 40 தனிநபர்களும் 17 நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
"1எம்டிபி மோசடி குறித்து சிலருக்கு சந்தேகங்கள் உள்ளன. ஆனால் மலேசியாவை தற்போது ஆட்சி செய்யும் அரசாங்கத்துக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. மலேசியர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை குற்றம் புரிந்தோரை நாங்கள் விடாமல் துரத்துவோம்," என்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் கூறினார்.