காசா/ ஜெருசலம்: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இைடயிலான சண்டை நேற்று முன்தினம் உச்சக்கட்டத்தை எட்டியது. இரு தரப்பினரும் மாறி மாறி வான் வழித் தாக்குதலை நடத்தினர். இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை விடியற்காலை இஸ்லாமிய அமைப்புகளும் இதர பாலஸ்தீன போராளிகள் அமைப்புகளும் இஸ்ரேலின் டெல் அவிவ், பியர்ஷெபா மீது பல முறை ஏவுகணைகளைப் பாய்ச்சி தாக்குதலைத் தொடுத்தனர். இஸ்ரேலும் நூற்றுக்கணக்கான ஆகாயத் தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்தது. இதில் காஸாவில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதலில் மற்றொரு கட்டடமும் சேதமடைந்தது. உளவுத் துறை நிலையங்கள், ஏவுகணை ஏவுத் தளங்கள் உள்ளிட்ட ஹமாஸ் இலக்குகளை மட்டுமே குறி வைத்துத் தாக்குவதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.
இஸ்ேரல் மீது பாலஸ்தீன போராளிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
ஏறக்குறைய 850 ஏவுகணைகள் இஸ்ரேல் நிலப் பகுதிகளில் விழுந்திருக்கலாம் அல்லது தற்காப்பு முறை மூலம் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று ராணுவப் ேபச்சாளர் ஜோனதன் கன்ரிகஸ் கூறினார். காஸா வட்டாரத்திலும் 200 ஏவுகணைகள் விழுந்துள்ளதாக அவர் சொன்னார்.
இது, 2014ல் காஸாவில் நடந்த உக்கிரமான போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நடந்த மிகப்பெரிய தாக்கு தலாகும். இந்த மோதல் அனைத்துலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா மத்திய கிழக்கு அமைதி தூதரான டோர் வென்னஸ்லேண்ட் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் முழுப் போருக்கு இட்டுச் செல்லும். எல்லாத் தரப்பிலும் உள்ள தலைவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார். அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினருடன் ஐநா சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தொடர்ந்து தாக்குவதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது

