மியன்மாரில் 39 பேர் திடீர் கைது

மியன்மாரில் 39 பேர் திடீர் கைது

2 mins read
3797cbfe-d17e-4079-9407-1cfea0a3a317
2013ஆம் ஆண்டின் 'கிராண்ட் இண்டர்நேஷனல்' அழகியான ஹிடார் ஹிடெட் ஹிடெட் ராணுவத்துக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். படம்: ஏஎஃப்பி, மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல் ஹிடார் ஹிடெட் ஹிடெட் ஃபேஸ்புக் -

யங்­கூன்: மியன்­மா­ரில் ஜன­நா­யக முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்­தைக் கவிழ்த்து ஆட்­சிக் கட்­டி­லில் அமர்ந்­துள்ள ராணு­வம், அதி­ர­டி­யாக 39 பேரை கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ளது.

குண்­டு­வெ­டிப்பு, தீ மூட்­டு­வது, போரா­ளி­க­ளி­டம் ராணு­வப் பயிற்­சியைப் பெற முயற்­சி செய்­தது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் அவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ராணு­வம் தெரி­வித்­தது.

கடந்த பிப்­ர­வரி 1ஆம் தேதி ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. அப்­போது முதல் நாடு முழு­வ­தும் உள்ள நக­ரங்­களில் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்­கள் நடந்து வரு­கின்­றன. சில சம­யங்­களில் அர­சாங்க அலு­வ­ல­கங்­களும் ராணுவ வளா­கங்­களும் குறி வைக்­கப்­ப­டு­கின்­றன.

இதற்கு இது­வரை எந்த அமைப்­பு­களும் பொறுப்பு ஏற்­க­வில்லை. ஆனால் நாட்­டின் நிலைத்­தன்­மையைச் சீர்குலைக்கும் செயல் என்று ராணு­வம் கூறி வரு­கிறது.

அண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யில் 48 கையெ­றி குண்டு, இரு­பது வெடிக் குச்­சி­கள் உள்­ளிட்ட பொருட்­களை ராணு­வம் கைப்­பற்­றி­யுள்­ள­தாக மியன்­மா­ரின் ஊட­க­மான குளோ­பல் நியூ­லைட் தெரி­வித்­தது.

கிழக்­கில் உள்ள காயா மாநி­லத்­தில் போராளி அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து பயிற்சி பெற முயற்சி செய்த சில­ரும் கைது செய்­யப்­பட்­ட­தாக அந்த ஊட­கம் குறிப்­பிட்­டது.

நாளேடு அடை­யா­ளம் கண்­டு­பி­டித்த சந்­கேக நபர் காண்ட் சித்­து­வின் உற­வி­னர், பாது­காப்­புப் படை­யி­னர் வீட்டை சோத­னை­யிட்­ட­போது ஆயு­தங்­கள் எது­வும் கிடைக்­க­வில்லை என்றார்.

காண்ட் சித்து ஆரம்­பத்­தில் போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் அதன் பிறகு அதி­கா­ரி­க­ளின் ஒடுக்­கு­மு­றைக்­குப் பிறகு நிறுத்­திக் கொண்­டார் என்றும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர் பெயர் தெரி­விக்­கா­மல் தெரி­வித்­தார்.

ஆர்ப்­பாட்­டங்­களை ராணு­வம் நசுக்க ஆரம்­பித்­த­தும் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­களில் சிலர், எல்­லை­யோ­ரங்­களில் அதிக தன்­னாட்­சி கேட்டு பல ஆண்­டு­க­ளாக போராடி வரும் சிறு­பான்மை குழுக்­க­ளி­டம் பயிற்சி பெற விரும்­பி­னர்.

ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்றி நூறுவது நாளை நினை­வுப்­ப­டுத்­தும் வகை­யில் யங்­கூன், மத்­திய வட்­டா­ர­மான பாகோ உள்­ளிட்ட வர்த்­தக மையங்­களில் பேர­ணி­யும் மெழு­கு­வத்தி ஊர்­வ­ல­மும் நடை­பெற்­றுள்­ளன.

ராணு­வத்­துக்கு எதி­ராக மியன்­மா­ரின் உண்­மை­யான அதி­கா­ர­மாக தன்னை அறி­வித்­துக்­கொண்ட தேசிய ஒற்­றுமை அர­சாங்­கத்­துக்கு பல ஜன­நா­யக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ஆத­ரவு அளித்து வரு­கின்­ற­னர்.

கடந்த வாரம், மக்­கள் தற்­காப்­புப் படை அமைக்­கப்­படும் என்று தேசிய ஒற்­றுமை அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தது. ஆட்­சிக் கவிழ்ப்­புக்­குப் பிறகு மியன்­மார் பாது­காப்­புப் படை 783 பேரைக் கொன்­று­விட்­ட­தா­க­வும் 3,800 பேரை சிறை­யில் அடைத்து விட்­ட­தா­க­வும் அர­சி­யல் கைதி­கள் கண்­கா­ணிப்­புக் குழு­வி­னர் கூறு­கின்­ற­னர்.