புத்ராஜெயா: மலேசியாவில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கொவிட்-19 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று ஒரே நாளில் மட்டும் 39 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக அதிகமாக 29 பேர் மரணமடைந்தனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மலேசியாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,761க்கு அதிகரித்துள்ளது.
புதன்கிழமை அன்று 4,765 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்களுடன் சேர்த்து 453,222 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சிலாங்கூரில் மட்டும் 2,082 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் கோலாலம்பூரில் 540 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் கொவிட்-19க்கு எதிராக பெரும் போராட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
நேற்று முதல் ஜூன் 7ஆம் தேதி வரை 27 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாள்ேதாறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6,000லிருந்து 7,000 வரை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

