தைவானில் 180 பேருக்கு தொற்று; புதிய கட்டுப்பாடுகள்

தைவானில் 180 பேருக்கு தொற்று; புதிய கட்டுப்பாடுகள்

1 mins read
677147f1-f8b1-49bb-b64c-73198a0dbf55
-

தைப்பே: தைவான் அதன் தலை­ந­க­ரான தைப்பே­யி­லும் அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் கிரு­மித்­தொற்று எச்­ச­ரிக்கை நிலையை உயர்த்­தி­யி­ருக்­கிறது.

சமூக அள­வில் கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­கள் 180 வரை பதி­வா­ன­தால் அந்­நாட்டு அர­சாங்­கம் தீவி­ரக் கட்­டுப்­பா­டு­களை அமல்­ ப­டுத்தி வரு­கிறது. இத­னால் இரு வாரங்­க­ளுக்கு பல்­வேறு நிகழ்ச்­சி­கள் ரத்து செய்­யப்­படும். சமூக ஒன்­று­கூ­ட­லுக்­கும் வரம்பு விதிக்­கப்­படும்.

அலு­வ­ல­கங்­கள், பள்­ளி­கள், உண­வ­கங்­களை மூட அரசு உத்­த­ர­வி­ட­வில்லை. இருந்தாலும் திரை­ய­ரங்­கு­கள், இதர பொழு­து­போக்­குத் தளங்­கள் மூடப்­படும். குடும்ப உறுப்­பி­னர்­கள் ஐவர் மட்­டுமே ஒன்று ­கூட முடி­யும். வெளி­யில் பத்து பேர் வரை ஒன்­று­கூட அனு­ம­தி­யுண்டு.

முதல் முறை­யாக வெளி­யி­டங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. மது­பா­னக் கூடங்­கள், இரவு கேளிக்கை விடு­தி­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை.

சுகா­தார அமைச்­சர் சென் ஷி-சுங், சில இடங்­களில் அபாய அளவு கூடி­யுள்­ள­தால் எச்­ச­ரிக்கை நிலை­யும் உயர்த்­தப்­பட்­டுள்­ளதாக கூறினார்.

"இத்தகைய நடவடிக்கை களால்தான் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே தேவையற்ற சந்திப்புகளையும் பொது நிகழ்ச்சி ளையும் குறைத்துக் கொள்ளப் போவதாக அதிபர் ட்சாய் இங்-வென் அறிவித்துள்ளார்.

சமூகத் தொற்று அதிகரிப்பு பங்குச் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் நாட்டின் பொருளியல் அடித்தளம் சிறப்பாக உள்ளது என்று பிரதமர் சு டசெங்-சாங் வலியுறுத்தியுள்ளார்.