இஸ்ரேல்: இஸ்ரேல்-காஸா மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதற்கு மத்தியில், 'தொடர்ந்து பலமாக பதிலடி கொடுப்போம்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.
காஸாவில் உள்ள ஏபி மற்றும் அல் ஜசீரா ஊடக நிறுவனங்கள் செயல்பட்டு வந்த அல்-ஜலா கட்டடத்தை இஸ்ரேல் சனிக்கிழமை குண்டு வீசி தகர்த்தது.
குடியிருப்புகளையும் கொண்ட அந்த கட்டடத்தைக் குண்டு வீசி தகர்ப்பதற்கு முன்னர் அங்கிருந்த வர்களை வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்தது.
இந்த கட்டடம் ஹமாஸ் போராளிகளின் கூடாரமாக செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் தரப்பில் கூறப்
படுகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஊடக நிறுவனமான ஏபி, அதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் போராளிகள் குழுவும் டெல் அவிவ் மீதும் தெற்கு இஸ்ரேல் நகரங்கள் மீதும் ஏவு
கணைகள் வீசி தாக்குதல் நடத்தியது.
அதன் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு, "தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை. தேவைப்படும் வரை இது தொடரும்," என்றார். ஹமாஸ் தரப்பும் தாக்குதல் தொடரும் என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, நேற்று அதி காலை, காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரான யேஹியா சின்வாரின் வீட்டை
குண்டு வீசி தரைமட்டமாக்கியதாக தெரிவித்த இஸ்ரேஸ் ராணுவம், அது தொடர்பாக காணொளி ஒன்றையும் வெளியிட்டது.
இந்த தாக்குதல்களில் பாலஸ்தீன தரப்பில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர்.
கிழக்கு ஜெருசலேமிலிருந்து பல பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றுவதற்கான நீதிமன்ற வழக்கு தொடர்பில் பல வாரங்
களாக நீடித்த பதற்றங்களுக்குப் பின்னர் சென்ற திங்கட்கிழமை ஹமாஸ் போராளிகள் குழு ஆகாயத் தாக்குதலைத் தொடங்கியது.
இந்த தாக்குதல் தொடங்கியதில் இருந்து காஸாவில் 39 பிள்ளைகள் உட்பட 141 பேரும் இஸ்ரேல் தரப்பில் இரண்டு பிள்ளைகள் உட்பட 10 பேரும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவில் உயிரிழப்பு மேலும் அதிகரித்து வருவதாக அல் ஜசீரா ஊடக செய்தி கூறுகிறது.
காஸாவில் ஊடக நிறுவனங்களின் அலுவலகக் கட்டடங்கள் தரைமட்டம்

