பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் மோசமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்றும் அவர் சொன்னார்.
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, சரவாக், கெடா மற்றும் பேராக் மாநிலங்களின் மருத்துவ
மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 80 விழுக்காட்டிற்கும் மேல் நிரம்பிவிட்டதாகவும் சில மருத்துவமனைகளில் அனைத்து தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் நிரம்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும், 78 அரசாங்க மற்றும் கல்வி மருத்துவமனைகளில் 1,388 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளதாகவும் அவற்றில் 61 விழுக்காட்டு படுக்கைகள் கொவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால், தேவைக்கேற்ப கொவிட்-19 நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சுகாதார அமைச்சின் புதிய கணிப்புபடி, கட்டுப்பாட்டு விதிகள் சரியாகப் பின்
பற்றப்படவில்லை என்றால் ஜூன் மாதத்திற்குள் பாதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை 8,000க்கும் மேல் பதிவாகக்கூடும் என்கிறது. முன்னதாக இது 5,000மாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
மலேசியாவில், நேற்று 3,780 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 470,110 ஆனது.

