யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியை எதிர்க்கும் உள்ளூர் போராளிகள் குழு ஒன்று பின்வாங்கியுள்ளது.
மியன்மாரின் வடகிழக்கு நகரமான மிண்டாட்டில் ராணுவப் படையினர் கடந்த சில நாட்களாக மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலுக்கு மத்தியில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர்.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நடந்து வரும் வன்முறைகளால், அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று மிண்டாட் நகரம் ஆகும்.
"மோதலைத் தவிர்ப்பதற்காக
வும், ஊருக்கு ஏற்படும் சேதங்கள் பற்றிய கவலையாலும் நாங்கள் பின்வாங்கினோம்," என்று போராளி ஒருவர் கூறினார்.
அதோடு 40,000க்கும் அதிகமானோர் வசிக்கும் நகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உள்ளதாகவும், அதுவும் இப்போது பெரும்பாலும் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
"எல்லா ஆண்களும் இளையர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அனை
வரும் ஓடித் திரிகிறார்கள்," என்றார் அவர். டாட்மாடா என்று அறியப்படும் அந்த போராளிகள் குழுவில் இருந்து ஐந்து பேர் மாண்டுவிட்டதாக அமெரிக்க நிதிபெறும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம் ராணுவ கட்டுப்பாட்டு தொலைக்காட்சி, நேர்மையற்ற மக்களின் தாக்குதலால் பாதுகாப்புப் படையினர் சிலர் கொல்லப்பட்டதாகவும் சிலரைக் காணவில்லை என்றும் கூறியது.
இதற்கிடையே, அப்பாவிகள் உயிரிழப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் மியன்மார் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

