இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை

2 mins read
3a7f2797-dc46-4efc-a6a1-3e81389835c7
பாலஸ்தீன தந்தையொருவர் குண்டு வெடிப்பில் காயம் அடைந்த மகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இஸ்ரேல் குண்டுவீசி தகர்க்கப்பட்ட கட்டடத்திலிருந்து மகளை அவர் உயிரோடு மீட்டுள்ளார். படம்: இபிஏ -

பத்து குழந்தைகள் உட்பட 42 பேர் பலி

காஸா/ ஜெரு­ச­லம்: இஸ்­ரேல் நேற்­றும் இடை­வி­டா­மல் காஸா மீது குண்­டு­களை வீசி தாக்­கி­யது. ஹமாஸ் போரா­ளி­களும் தங்­க­ளால் இயன்ற அளவு இஸ்­ரேல் நக­ரங்­கள் மீது ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­னர்.

இஸ்­ரே­லுக்­கும் பாலஸ்­தீ­னத்­துக்­கும் இடையே இரண்­டா­வது வார­மாக நேற்று சண்டை தொடர்ந்­தது.

இரு தரப்­பி­ன­ரும் போரை நிறுத்த வேண்­டும் என்று உலக நாடு­கள் அழைப்பு விடுத்­தி­ருந்­தா­லும் இஸ்­ரே­லும் பாலஸ்­தீ­ன­மும் காதில் வாங்­கிக்கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

முக்­கிய சாலை­கள், பாது­காப்­புக் கட்­ட­டங்­கள், போரா­ளி­க­ளின் பயிற்சி முகாம்­கள், குடி­யி­ருப்­புக் கட்­டடங்­கள் ஆகி­ய­வற்றை இலக்­கா­கக் கொண்டு இஸ்­ரேல் குண்டு­ களை அடுத்­த­டுத்து வீசி­யது. இந்த வெடிச்­சத்­தம் இரவு முழு­வ­தும் பாலஸ்­தீ­னத்­தின் பல பகு­தி­களில் எதி­ரொ­லித்­தது.

இஸ்­ரே­லிய நக­ரங்­க­ளான பியர்­ஷெபா, ஆஷ்­கெ­லோன் மீது நள்­ளி­ர­வில் காஸா­வி­லி­ருந்து ஏவு ­கணை­கள் பாய்ச்­சப்­பட்­டதால் ஹமாஸ் போரா­ளி­கள் பயன்­ப­டுத்­திய நிலத்­தடி சுரங்­கம் உட்­பட 'பயங்­க­ர­வா­தி­க­ளின் இலக்­கு­களை' போர் விமா­னங்­கள் தாக்­கி­ய­தாக இஸ்­ரே­லிய ராணு­வம் கூறி­யது.

ஹமாஸ் உயர்மட்ட தள­ப­தி­க­ளுக்­குச் சொந்­த­மான ஒன்­பது குடி­யி­ருப்­பு ­க­ளை­யும் இஸ்­ரே­லிய ராணு­வம் தரைமட்டமாக்கியது.

காஸா போரா­ளி­கள் ஏறக்­கு­றைய 60 ஏவு­க­ணை­களை இஸ்­ரே­லிய நக­ரங்­கள் மீது பாய்ச்­சி­ய­தாக இஸ்­ரே­லிய ராணு­வம் குற்­றம் சாட்­டி­யது.

இஸ்­ரே­லின் தாக்குதலில் வடக்கு காஸா­வில் உள்ள தொழிற்­சாலை தீப்­பற்றி எரிந்­தது. தீயை அணைக்க பாலஸ்­தீன தீ அணைப்­பா­ளர்­கள் கடு­மை­யா­கப் போரா­டி­னர்.

அதி­காலை முழு­வ­தும் இஸ்­ரே­லின் குண்டு மழை சத்­தம் கேட்­டுக் கொண்டே இருந்­தது. இத­னால் காஸா குடி­யி­ருப்­பா­ளர்­கள் ரொட்டி மற்­றும் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்க கடை­க­ளுக்கு ஓடி­னர்.

"குண்டு சத்­தம் கேட்­டுக் கொண்டே இருந்­த­தால் என்­னு­டைய குழந்­தை­கள் இரவு முழு­வ­தும் தூங்க முடி­ய­வில்லை," என்று ஐந்து குழந்­தை­க­ளுக்­குத் தாயான உம் நயிம் தெரி­வித்­தார்.

நேற்று நடை­பெற்ற சண்ைட­யில் இரு தரப்­பி­லும் ஏற்­பட்ட உயிர்ச்­சே­தம் பற்றி விவ­ரம் தெரி­ய­வில்லை.

ஆனால் இது­வரை 58 குழந்­தை­கள், 34 பெண்­கள் உட்­பட 197 பேர் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இஸ்­ரே­லில் இரண்டு குழந்­தை­கள் உட்­பட பத்து பேர் மாண்­டு­விட்­ட­தாக இஸ்­ரே­லிய அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

இதற்­கி­டையே 'ஓஐசி' எனும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பு ஞாயிற்­றுக்கிழமை அன்று காஸா மீதான 'காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான' தாக்­கு­தல்ளை நிறுத்த வேண்­டும் என்று அறை­கூ­வல் விடுத்­து உள்­ளது. பாலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு குற்­றம்­சாட்­டப்­ப­டு­வ­தாக வும் அது கூறி­யது.