பேங்காக்: தாய்லாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 9,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர்், அதாவது 6,853 பேர் சிறைக் கைதிகள் என்று தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.
மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111,082க்கு அதிகரித்துள்ளது.
புதிதாக 25 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
இதனால் கடந்த ஆண்டு கொள்ளை நோய் பரவியதிலிருந்து இந்நாள் வரை 614 பேர் இறந்துவிட்டனர்.
சிறைச்சாலை குழுமத்தைத் தவிர புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 2,782. இது, கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஆக அதிகமாக பதிவான 2,839 சம்பவங்களுக்கு நெருக்கமாக தற்போது கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் முன்களப் பணியாளர்கள் மற்றும் எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் உட்பட 2.2 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சீனாவின் சினோவாக் பயோடெக், பிரிட்டிஷ்-சுவீடனின் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இம்மாதம் பெரிய அளவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு கடந்த வாரமே முன் பதிவு தொடங்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் மூலம் 66 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட தாய்லாந்தில் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

