லண்டன்: கிருமிப் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஆனால் கிருமித்தொற்று மீண்டும் பரவாமல் இருக்க மக்கள் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது மில்லியன் கணக்கான மக்கள் வரம்புக்கு உட்பட்டு ஒன்றுகூட முடியும். அன்புக்குரியவர்களை கட்டித் தழுவ முடியும். மதுபானக் கூடங்களுக்கும் உணவகங்களுக்கும் தாராளமாகச் சென்று வரலாம்.
வெளிநாட்டு பயணத்திற்கான தடையும் அகற்றப்பட்டு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால் எல்லாரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று பிரதமர் ஜான்சன் கூறியுள்ளார்.
வாரத்திற்கு இருமுறை கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
"நமது பொது முடக்கத்திற்கான பாதையில் நாம் அனைவரும் சேர்ந்து மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம். ஆனால் ஒவ்வோர் அடியையும் எச்சரிக்ைகயுடன் எடுத்து வைக்க வேண்டும்," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அழைக்கும்போதெல்லாம் வாரந்தோறும் பரிசோதனைகளைச் செய்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். கைகள், முகம், இடைவெளி, காற்று ஆகியவற்றை மறந்துவிடக் கூடாது என்றார் அவர்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் முழுவதும் முடக்கம் தளர்த்தப்பட்டாலும் ஒவ்வொரு நாட்டுக்கும் விதிமுறைகள் மாறுபடு கின்றன. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ மற்றும் மோரேயில் உள்ளூர் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.

