மலேசியாவில் ஆக அதிக மரணம்: ஜனவரிக்குப் பின் அதிக தொற்று

மலேசியாவில் ஆக அதிக மரணம்: ஜனவரிக்குப் பின் அதிக தொற்று

2 mins read
01f67fa3-7271-430f-9fa9-c42ae86bf4c3
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நேற்று புதி­தாக 4,865 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவ்­வாண்டு ஜன­வ­ரிக்­குப் பிறகு ஒரே நாளில் பதி­வாகி இருக்­கும் ஆக அதி­க­மான எண்­ணிக்கை இது.

அதேபோல 47 பேர் தொற்றால் உயிரிழந்துவிட்டனர். தொற்று பரவத் தொடங்கியது முதல் ஒரே நாளில் நிகழ்ந்த ஆக அதிகமான மரணம் இது. இதற்கு முன்னர் ஒரே நாளில் 45 பேர் மாண்டதே ஆக அதிக எண்ணிக்கையாக நீடித்து வந்தது.

புதிதாக தொற்று உறுதி செய்யப் பட்டவர்­க­ளை­யும் சேர்த்து மலே­சி­யா­வில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 479,421க்கு அதி­க­ரித்­துள்­ளது.

சிலாங்­கூர் மாநி­லத்­தில்­தான் ஆக அதி­க­மாக 1,743 பேர் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் அதிகமாக 18 பேர் உயிரிழந்ததாகவும் சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டார்.

அதற்கு அடுத்த நிலை­யில் சர­வாக் மாநி­லத்­தில் 512 பேரும் கோலா­லம்­பூ­ரில் 477 பேரும் ஜோகூ­ரில் 407 பேரும் கிளந்­தா­னில் 406 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மலே­சி­யா­வில் ஜன­வரி 31ஆம் தேதி ஒரே நாளில் 5,298 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

அதன் பின்­னர் அந்த எண்­ணிக்­கைப் படிப்­ப­டி­யா­கக் குறைந்து வந்­தது. இப்­போது மீண்­டும் உச்­சத்தை நோக்­கிச் சென்று கொண்­டி­ருக்­கிறது.

தொற்­றுப் பர­வல் மீண்­டும் வேக­மெ­டுத்­தி­ருப்­ப­தால் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­யைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் அங்கு எழுந்­துள்­ளது. தனி­யார் துறை­யைச் சேர்ந்த முத­லா­ளி­கள் தங்­க­ளது ஊழி­யர்­க­ளுக்­கான தடுப்­பூ­சியை வாங்­கிப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று சில மாநி­லங்­கள் தெரி­வித்து உள்­ளன.

ஆயி­னும் வடக்கு மாநி­ல­மான பினாங்கு கூட்­ட­ர­சின் சுகா­தார அமைச்­சுக்கு ஒரு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது. தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றி­ட­மி­ருந்து இரண்டு மில்­லி­யன் முறைக்­கான தடுப்­பூ­சி­யைப் பெற­வேண்­டும் என்ற தங்­க­ளது கோரிக்­கையை மறு­ப­ரி­சீ­லனை செய்து அனு­மதி வழங்க வேண்­டும் என்­பதே அந்த வேண்­டு­கோள்.

இது குறித்து மார்ச் 12ஆம் தேதி கடி­தம் ஒன்­றின் மூலம் அனு­மதி கோரி­ய­தா­க­வும் ஆனால் அதற்கு அைமச்சு மறுப்பு தெரி­வித்­த­தா­க­வும் பினாங்கு முத­ல­மைச்­சர் சோ கோன் இயோ நேற்று தெரி­வித்­தார்.

அதே நேரம் சிலாங்­கூர் உள்­ளிட்ட சில மாநி­லங்­க­ளுக்கு இது­போன்ற அனு­மதி வழங்­கப்­பட்டு பினாங்கு மட்­டும் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தாக அவர் குறை­கூ­றி­னார்.