800 பேரை மியன்மார் ராணுவம் கொன்று குவித்ததாக தகவல்

800 பேரை மியன்மார் ராணுவம் கொன்று குவித்ததாக தகவல்

1 mins read
77a3a108-6060-49e6-baaa-d418da79f67a
-

யங்­கூன்: பிப்­ர­வ­ரி­ மாதம் ஆட்­சிக் கவிழ்ப்­பில் ராணு­வம் ஈடு­பட்­டது முதல் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டம் நடத்­திய 800 பேரை மியன்­மார் பாது­காப்­புப் படை­கள் கொன்­று­விட்­ட­தாக பொது­நல அமைப்பு ஒன்று தெரி­வித்துள்­ளது.

தனக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­வர்­களை ஒடுக்­கத் தொடங்­கிய ராணு­வம், நேற்று முன்­தி­னம் (மே 17) நில­வ­ரப்­படி 802 பேரை கொன்று குவித்­தி­ருப்­ப­தாக அர­சி­யல் கைதி­க­ளுக்­கான ஆத­ரவு சங்­கம் (ஏஏ­பிபி) தெரி­வித்­துள்­ளது.

"எங்­கள் அமைப்பு சரி­பார்த்த எண்­ணிக்கை இது என்­ற­போ­தி­லும் உண்­மை­யான மரண எண்­ணிக்கை இதை­வி­டக் கூடு­த­லாக இருக்­கக்­கூ­டும்," என்று இந்த அமைப்­பைச் சேர்ந்­தோர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னர்.

இந்த எண்­ணிக்­கை­யில் சின் மாநில நக­ரங்­க­ளி­லும் மாண்­டலே, யங்­கூன் நக­ரங்­க­ளி­லும் புதி­தாக ஆறு பேர் கொல்­லப்­பட்­ட­தும் அடங்­கும் என ஏஏ­பிபி கூறி­யது.

இருப்­பி­னும் மொத்த மரண எண்­ணிக்­கையை தனிப்­பட்ட முறை­யில் உறுதி செய்ய இய­ல­வில்லை என்­றும் ராணு­வப் பேச்­சா­ள­ரின் தொடர்பு கிடைக்­க­வில்லை என்­றும் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி 4,120 பேரை ராணு­வம் தடுத்து வைத்­துள்­ள­தா­க­வும் இவர்­களில் 20 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஏஏ­பிபி தெரி­வித்­துள்­ளது.