செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8b71e273-7a13-4b6c-b124-4902cc7792cd
-

தாய்­லாந்­தில் இரு மாதக் குழந்தை உள்ளிட்ட 35 பேர் மர­ணம்

பேங்­காக்: தாய்­லாந்­தில் புதி­தாக 35 பேர் மர­ண­ம­டைந்து விட்­ட­தாக நேற்­றுக் காலை அறி­விக்­கப்­பட்­டது. இரு மாதக் குழந்தையும் மாண்டோரில் அடங்கும். அந்­நாட்­டில் அன்­றா­டம் பதி­வா­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று மரண எண்­ணிக்­கை­யில் இதுவே ஆக அதி­கம். மேலும், புதி­தாக 2,473 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் நேற்­றைய அறிக்கை குறிப்­பிட்­டது. இவர்­களில் 680 பேர் சிறைக் கைதி­கள். புதிய எண்­ணிக்­கை­யை­யும் சேர்த்து அங்கு பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 113,555 ஆக உயர்ந்­து­விட்­டது. தாய்­லாந்­தில் தொற்று கார­ண­மாக மாண்­டோ­ரின் எண்­ணிக்­கை­யும் 649க்கு அதி­க­ரித்­து­விட்­டது.

இந்­தியா, பங்­ளா­தேஷ் ஊழி­ய­ருக்கு தலா 1,500 ரிங்­கிட் அப­ரா­தம்

ஜெம்­போல்: லாரி­யில் பய­ணம் செய்­த­போது தனி­ம­னித இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றத் தவ­றி­ய­தற்­காக மலே­சி­யா­வின் நெகிரி செம்­பி­லான் மாநி­லத்­தில் 12 வெளி­நாட்­டுத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. இந்­தியா, பங்­ளா­தேஷ் நாடு­க­ளைச் சேர்ந்த அவர்­கள் அனை­வ­ரும் 25 வய­துக்­கும் 47 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்று ஜெம்­போல் வட்­டார தலைமை போலிஸ் அதி­காரி ஹூ சாங் ஹூக் தெரி­வித்­தார். அவர்­கள் சென்ற லாரியை திங்­கட்­

கி­ழமை மாலை ஜாலான் ரோம்­பின்-பாசிர் புசார் சாலைச்

சந்­திப்­பில் போலி­சார் இடை­ம­றித்­துச் சோதனை நடத்­தி­னர். தொழி­லா­ளர்­கள் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­போ­தி­லும் கட்­டாய தனி­ம­னித இடை­வெளி விதி­யைக் கடை­பி­டிக்­க­வில்லை என்­ப­தால் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் 1,500 ரிங்­கிட் அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அவர் கூறி­னார். மேலும், இது தொடர்­பான விசா­ர­ணைக்கு உத­வும்­பொ­ருட்டு இந்­தத் தொழி­லா­ளர்­க­ளின் முத­லாளி அழைக்­கப்­பட்டு இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி: இந்தோனீசியா தீவிரம்

ஜகார்த்தா: நிறு­வ­னங்­க­ளின் நிதி ஆத­ர­வில் ஊழி­யர்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் திட்­டத்தை இந்­தோ­னீ­சியா நேற்று தொடங்­கி­யது. அதிக தொழி­லா­ளர்­களை உள்­ள­டக்­கிய உணவு தொடர்­பான நிறு­வ­னங்­கள், பெட்­ரோ­கெ­மிக்­கல் நிறு­வ­னங்­கள் போன்­ற­வற்­றின் ஊழி­யர்­கள் தங்­க­ளுக்­கான தடுப்­பூ­சி­யைப் பெறு­வர்.

இது தொடர்­பாக நேற்று இணை­யம் வழி­யாக உரை நிகழ்த்­திய அதி­பர் ஜோக்கோ விடோடோ, "நாட்­டிலுள்ள எல்­லாத் தொழிற்­சா­லை­களும் தொழிற்­பேட்­டை­களும் கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து காப்­பாற்­றப்­பட வேண்­டும். நமது பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு அவை அத்­தி­யா­வ­சி­ய மானவை. உற்­பத்தி சரிந்­தால் நமது பொரு­ளி­யல் வளர்ச்சி கீழ்­நோக்­கிச் சென்­று­வி­டும்," என்­றார். மேற்கு ஜாவா மாகா­ணத்­ தொழிற்­பேட்டை ஒன்­றி­லி­ருந்து அவர் பேசிய உரை தடுப்­பூ­சித் திட்­டம் தொடங்­கப்­பட்ட 18 இடங்­களில் இணை­யம் வழி­யாக ஒலி­ப­ரப்­பா­னது. இந்­தோ­னீ­சியா ஜன­வரி நடுப்­ப­கு­தி­யில் தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் தொடங்­கி­யது.

மீட்சி மீது ஏர்ஏஷியா நம்பிக்கை

கோலா­லம்­பூர்: வெற்­றி­க­ர­மான தடுப்­பூ­சித் திட்­டம் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை விரை­வில் மீட்­சி­ய­டைய உத­வும் என்று ஏர்­ஏ­ஷி­யா குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி டோனி ஃபெர்னாண்­டஸ் தெரி­வித்துள்­ளார். அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், தடுப்­பூ­சித் திட்­டம் தற்­போது செயல்­படுத்­தப்­ப­டு­கிறது. ஏற்­கெ­னவே பய­ணத்­து­றைக்கு வலு­வான தேவை உள்­ளது. இவை இரண்­டும் விமா­னப் போக்­கு­ வ­ரத்தை அடுத்த சில மாதங்­களில் மீட்க உத­வும்," என்­றார்.