தடுப்-பூசி போட்-டுக்-கொள்ள தாம-திக்-கும் ஆஸ்-தி-ரே-லிய மக்-கள்; எச்-ச-ரிக்-கும் மருத்-து-வர்-கள்

தடுப்-பூசி போட்-டுக்-கொள்ள தாம-திக்-கும் ஆஸ்-தி-ரே-லிய மக்-கள்; எச்-ச-ரிக்-கும் மருத்-து-வர்-கள்

1 mins read
77225c47-dcc2-4305-baf8-be98a9bbf987
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வர்த்­தக அதி­பர்­கள் அனைத்­து­லக எல்­லையைத் திறக்­கு­மாறு கோரிக்கை விடுத்து வரும் வேளை­யில், தடுப்­பூசிக் போட்­டுக் கொள்­வ­தில் ஆஸ்­தி­ரே­லிய மக்­கள் மந்­த­மாக இருப்­பது குறித்து அந்­நாட்டு தலைமை மருத்­துவ அமைப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் களை­வ­தில் ஆஸ்­தி­ரே­லியா வெற்றி கண்­டி­ருப்­ப­தால், அங்­கி­ருப்­ப­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்கொள்­வ­தைத் தாம­தப்­ப­டுத்­து­வது கவ­லை­ய­ளிப்­ப­தாக ஆஸ்­தி­ரே­லிய மருத்­துவ முகமை தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தயங்­கு­வது கொவிட்-19 விதி­மீ­றல்­கள் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்தை அதி­க­ரிக்­கும் என்று ஆஸ்­தி­ரே­லிய மருத்­துவ முகமை எனும் ஏஎம்ஏ கூறி­யுள்­ளது.

"உரு­மா­றிய கிரு­மித்­தொற்­றால் வெளி­நா­டு­களில் என்ன நடக்­கிறது என்­பதை நாம் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றோம்.

"மக்­கள்­தொ­கை­யில் கணி­ச­மான பகு­தி­யி­னர், குறிப்­பாக 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள், தடுப்­பூசி போட்­டுக் கொள்­வது நல்­லது," என்று முக­மை­யின் துணைத் தலை­வர் கிறிஸ் மோ ஏபிசி ரேடி­யோ­வி­டம் கூறி­னார்.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஆஸ்­தி­ரே­லியா தனது அனைத்­து­லக எல்­லை­க­ளைச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூடி­யது. அங்கு இது­வரை 30,000த்திற்­கும் குறை­வான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களே பதி­வா­கி­யுள்­ளன. 910 பேர் மாண்ட

னர்.

இத­னி­டையே, அடுத்த ஆண்டு மத்­தி­யில்­தான், ஆஸ்­தி­ரே­லியா தனது அனைத்­து­லக எல்­லை­யைத் திறக்­கும் என்று சில வாரங்­க­ளுக்கு முன்பு அர­சாங்­கம் அறி­வித்­தது.

ஆனால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட தொழில் முனை­வர்­கள் அனைத்­து­லக எல்­லையை விரை­வாக திறக்­கு­மாறு கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.