பெஷாவர்: சமூக ஊடகமான டிக்டாக்கில் பதிவேற்றுவதற்காக தன்னைத் தானே சுட்டுக்கொள்வது போல் நடித்த இளையர் உயிரிழந்த சோக சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
ஹமிதுல்லா, 19, உள்ளூரில் சமூக ஊடகத்தில் நன்கு அறியப்பட்ட இளையர் ஆவார். நண்பர்களுடன் விளையாட்டாக ஏமாற்றுவது, கிரிக்கெட் விளையாடுவது உள்ளிட்ட காெணாளிகள் அவருடைய டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவர் தனது நண்பரின் துப்பாக்கியில் குண்டுகள் போடப்பட்டிருந்தது தெரியாமல் நேராக தன் தலையில் வைத்து துப்பாக்கியை இயக்கியதால் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே, இந்தக் காணொளி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றாலும் நண்பர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து வெளியுலகிற்கு அம்பலமானது என்றும் அவர் சொன்னார்.

