'சில நாட்-களில் சண்டை முடி-வுக்கு வரும்'

'சில நாட்-களில் சண்டை முடி-வுக்கு வரும்'

1 mins read
6e1a4eb5-000c-4db7-bfdb-efe4a64d0307
இந்­தோ­னீ­சி­யா­வின் செழிப்­பான நீதிக் கட்­சி­யைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான வர்­கள், காஸா மீதான இஸ்­ரே­லின் தாக்­கு­தலை நிறுத்த வலி­யு­றுத்தி, ஜகார்த்­தா­வில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கம் முன் பேரணி நடத்­தி­னர்.படம்: இபிஏ -

காஸா: இஸ்­ரேல், காஸா இடை­யில் 11வது நாளாக சண்டை தொடர்ந்­த­போ­தும், சில நாட்­க­ளுக்­குள் அது முடி­வுக்கு வரும் என்று ஹமாஸ் அதி­காரி ஒரு­வர் கணித்­தி­ருக்­கி­றார்.

சண்டை நிறுத்­தத்­திற்­கான வழி­யில் செயல்­ப­டு­மாறு இஸ்­ரே­லிய பிர­த­மர் பெஞ்­ச­மின் நெட்­டன்­யா­கு­வி­டம் நேற்று முன் தினம் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் வலி­யு­றுத்­தி­னார்.

மத்­தி­யஸ்­தர்­க­ளின் உத­விக்­குப் பிறகு போர்­நி­றுத்­தத்­திற்கு இரு தரப்­பி­ன­ரும் கொள்கை அடிப்­ப­டை­யில் ஒப்­புக்கொண்­ட­தாக எகிப்து வட்­டா­ரம் கூறு­கிறது. ஆனால் இன்­னும் ரக­சிய பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு வரு­வ­தால், அது பற்­றிய விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

தற்­போ­தைய முயற்­சி­க­ளால் இன்­னும் ஓரிரு நாட்­களில் சண்டை நிறுத்­தம் கொண்டு வரப்­படும்," என்று லெப­னான் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு அளித்த பேட்­டி­யில் ஹமாஸ் அர­சி­யல் அதி­கா­ரி­யான மூசா அபு கூறி­னார்.

சண்டை நிறுத்­தத்­திற்­கான பேச்சு வார்த்தை ஒரு­பக்­கம் இருந்­தா­லும் இரு தரப்­பும் தொடர்ந்து தாக்­கு­தல்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

நேற்று நடந்த சண்­டை­யின் போது இஸ்­ரேல் படையினர் வான் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­னர். இத­னால் இரண்டு வீடு­கள் தரை­மட்­ட­மா­கின. நால்­வர் காய­ம­டைந்­த­னர்.

பாலஸ்­தீ­னர்­களும் இஸ்­ரேல் பகு­திக்­குள் ஏவு

­க­ணை­களை வீசி தாக்­கு­தல்­க­ளைத் தொடர்ந்த

னர்.