மியன்மாரில் 125,000 பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

2 mins read
364218e6-d5a6-4d08-bc98-f16bd799fb03
கேஐஏ எனும் போராளி குழு மியன்மார்-சீனா எல்லைப் பகுதியில் உள்ள குட்காய் நகரில் இம்மாதம் 18ஆம் தேதி தாக்குதல் நடத்தியதில் தனியார் எரிபொருள் டேங்க் ஒன்று தீப்பற்றி எரிந்தது. கச்சின்வேவ்ஸ் எனும் ஊடகக் குழு புகைப்படத்தை வெளியிட்டது.படம்: ஏஎஃப்பி -

யங்­கூன்: மியன்­மா­ரில் ரானுவ ஆட்­சிக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து பொது­மக்­க­ளின் ஒத்­து­ழை­யாமை இயக்­கத்­தில் இணைந்­த­தற்­காக 125,000க்கும் அதி­க­மான பள்ளி ஆசி­ரி­யர்­கள் பணி­ இ­டை­நீக்­கம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக மியன்­மா­ரின் ஆசி­ரி­யர்­கள் சம்­மே­ள­னத்­தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

புதிய பள்­ளி­யாண்டு தொடங்­கு­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு முன்பு இந்த பணி­யி­டை­நீக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஒத்­து­ழை­யாமை இயக்­கத்­தின் அங்­க­மாக சில ஆசி­ரி­யர்­களும் பெற்­றோர்­களும் பள்­ளிக்­குச் செல்­லா­மல் இருக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் ஐந்­தாம் தேதி 125,900 பள்ளி ஆசி­ரி­யர்­கள் பணி இ­டை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அதி­காரி தமது விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­க­வில்லை. ஈராண்டு­ க­ளுக்கு முன்பு வரை­யி­லான தரவு­ க­ளின்­படி மியன்­மா­ரில் 430,000 பள்ளி ஆசி­ரி­யர்­கள் இருந்­த­னர்.

"பள்­ளி­யில் பணிக்கு வர­வ­ழைக்­கும் நோக்­கில் ஆசி­ரி­யர்­களை அச்­சு­றுத்­தவே இது போன்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. இத்­தனை­ பேரை பணி­நீக்­கம் செய்­தால் ஒட்­டு­மொத்த கட்­ட­மைப்­பும் நின்­று ­போ­கும்," என்று குறிப்­பிட்ட ஆசி­ரி­ய­ரு­மான அந்த அதி­காரி, தாம் பள்­ளிக்­குத் திரும்­பி­னால் தன்னை வழக்குகளிலிருந்து விடுவிப்பதாக கூறப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார்.

மியன்­மா­ரின் கல்வி அமைச்சு அல்­லது ராணுவ ஆட்­சி­யின் பேச்­சா­ளர் போன்­ற­வர்­களை இது சம்­பந்­த­மாக தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என ராய்ட்­டர்ஸ் தெரி­வித்­தது. ஆசி­ரி­யர்­க­ளை­யும் மாண­வர்­க­ளை­யும் பள்­ளிக்­குத் திரும்­பு­மாறு அர­சாங்­கத்­தால் நடத்­தப்­படும் 'குளோ­பல் நியூ லைட் ஆஃப் மியன்­மார்' செய்­தித்­தாள் அழைப்பு விடுத்­தி­ருந்­தது.

19,500 பல்­க­லைக்­க­ழக ஊழி­யர்­களும் பணி­ இ­டை­நீக்­கம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக ஆசி­ரி­யர்­கள் குழு­மம் தெரி­வித்­தது.

ஜூன் மாதத்­தில் பள்­ளி­கள் திறக்­கப்­படும் நிலை­யில் அடுத்த வாரம் பள்­ளி­களில் பதி­வு­கள் தொடங்­கு­கின்­றன. ஆனால், பிள்­ளை­க­ளைப் பள்­ளிக்கு அனுப்­பப்­போ­வ­தில்லை என்று சில பெற்­றோர் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

அண்­மைய ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது பாது­காப்­புப் படை­யி­ன­ரால் பலர் கொல்­லப்­பட்­ட­தைச் சுட்­டிக்­காட்டி, அந்த ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்ற பல மாண­வர்­களும் பள்­ளிக்­குத் திரும்­பப்­போ­வ­தில்லை என்று குறிப்­பிட்­டுள்­ள­னர். ஜன­நா­ய­கம் திரும்­பக் கிடைத்த பிற­கு­தான் பள்­ளிக்­குச் செல்­வேன் என்று 18 வய­தான வின் எனும் மாண­வர் குறிப்­பிட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது. கடந்த ஆண்டு அனைத்­து­லக அள­வில் 93 நாடு­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் மியன்­மா­ரின் கல்­வித் தரம் 92வது இடத்­தில் உள்­ளது.

இதற்­கி­டையே, மியன்­மார் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கும் ஆயு­தம்­தாங்­கிய இனக்­கு­ழுக்­க­ளுக்­கும் இடையே சீனா - மியன்­மார் எல்­லைப் பகு­திக்கு அரு­கில் உள்ள மூஸ் நக­ரத்­தில் நேற்று துப்­பாக்­கிச் சண்டை மூண்­ட­தா­கத் தக­வல்­கள் குறிப்­பி­டு­கின்­றன. அதி­காலை வேளை­யில் இந்­தச் சண்டை நிகழ்ந்­த­தாக டிவிபி, கிட் திட் மீடியா போன்ற ஊட­கங்­கள் தெரி­வித்­தன. துப்­பாக்­கிக் குண்­டு­கள் துளைத்த பொது­மக்­கள் வாக­னங்­களின் படங்­கள் ஊடகங்களில் வெளி­யி­டப்­பட்­டன. சம்­ப­வத்­தில் யாரும் உயி­ரி­ழந்­தது குறித்த தக­வல் எது­வும் உட­ன­டி­யாக வெளி­யா­க­வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.