மலேசியா: 2 மணி நேரம் வரை கடைகளில் இருக்க அனுமதி

மலேசியா: 2 மணி நேரம் வரை கடைகளில் இருக்க அனுமதி

2 mins read
65f167b1-71d7-4ae6-b9f2-0a5bb810415b
-

புத்­ரா­ஜெயா: மலே­சி­யா­வில் உள்ள கடைத்­தொ­கு­தி­கள் உள்­ளிட்ட அனைத்து கடை­க­ளி­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­க­பட்­ச­மாக 2 மணி­நே­ரம் வரை இருக்­க­லாம் என­வும் நாளை முதல் இது நடப்­புக்கு வரு­வ­தா­க­வும் உள்­நாட்டு வர்த்­த­கம் மற்­றும் வாடிக்­கை­யா­ளர் விவ­கார அமைச்­சர் அலெக்­சாண்­டர் நந்தா லிங்கி தெரி­வித்­துள்­ளார்.

மூத்த தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் அறி­வித்த அதிக கட்­டுப்­பா­டு­க­ளு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை 3.0 செயற்­பாட்டு நடை­மு­றை­களில் இது­வும் அடங்­கும் என்­றார் அவர்.

அனைத்து சில்­லறை, மொத்த, விநி­யோக வளா­கங்­களும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. மருந்­த­கம், சில தனி­ந­பர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் போன்­றவை காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்­ப­ட­லாம்.

அத்­தி­யா­வ­சி­யத் தேவை­க­ளுக்­கான பொருள்­கள் போதிய அள­வுக்கு கிடைக்­கும் என்­ப­தால் யாரும் பயந்து பொருள்­களை வாங்­கிக் குவிக்­கத் தேவை­யில்லை என்று குறிப்­பிட்ட திரு நந்தா, கடை­க­ளின் அள­வைப் பொறுத்து எந்­த­வொரு குறிப்­பிட்ட நேரத்­தி­லும் அதற்­குள் இருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அனைத்து கடை­க­ளி­லும் 60% வரை ஊழி­யர்­கள் பணி­யில் இருக்­க­லாம். அதிக அபா­யம் மிக்க பகு­தி­யாக சுகா­தார அமைச்­சால் கணிக்­கப்­படும் கடை­கள் துப்­பு­ர­வுப்­ப­டுத்­து­வ­தற்­காக உட­ன­டி­யாக மூன்று நாள்­க­ளுக்கு மூடப்­படும் என்­றார் அவர்.

மலேசியாவில் புதிய உச்சமாக நேற்று 6,976 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று பதிவானது. அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 512,091 ஆனது. சிலாங்கூரில் ஆக அதிகமாக 2,235 பேருக்கு தொற்று பதிவானது. சரவாக்கில் 553 பேருக்கும் ஜோகூரில் 549 பேருக்கும் பெர்லிசில் 8 பேருக்கும் புத்ராஜெயா மத்திய வட்டாரத்தில் 30 பேருக்கும் லபுவான் மத்திய வட்டாரத்தில் 37 பேருக்கும் தொற்று உறுதியானது.