வாஷிங்டன்: சீனா கொவிட்-19 கொள்ளைநோய் பற்றி உலகிற்கு அறிவிப்பதற்கு சில மாதங்கள் முன்பே, வூஹான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் மூவர் மருத்துவ உதவியை நாடியதாக வெளியிடப்படாத அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை மேற்கோள்காட்டி வால் ஸ்திரீட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சீனாவில் முதல் தொற்று சம்பவம் 2019 டிசம்பர் மாதம்தான் பதிவானது என்றும் கொரோனா கிருமி வூஹான் ஆய்வகத்தில் உருவாகவில்லை என்றும் சீனா மறுத்து வரும் நிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே வூஹான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறுகிறது அந்த அறிக்கை.
மேலும் அந்த ஆய்வகத்தில் இருந்த எத்தனை ஆராய்ச்சி
யாளர்கள் பாதிக்கப்பட்டனர், அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காலம், மருத்துவமனைக்குச் சென்று வந்த தகவல்கள் குறித்து அமெரிக்க உளவுத் துறை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கிருமி பரவியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை இது வலுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொவிட்-19 எப்படி உருவானது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அடுத்த கட்ட விசாரணையை தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் நாளிதழின் இந்த அறிக்கை பற்றி கருத்து எதுவும் கூறவில்லை என்றாலும் பைடன் நிர்வாகம் கொவிட்-19
கிருமித்தொற்று எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்வதில் தீவிரமாக உள்ளதாகச் சொன்
னார்.
இதற்கிடையே, இதுகுறித்து பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சு, வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்பதை அமெரிக்கா தொடர்ந்து மிகைப்படுத்தி பேசி வருகிறது என்று சாடியது.

