வெற்-றிக் கிண்-ணத்-தோடு பிரியா விடை-பெ-றும் அகு-வேரோ மலே-சி-யா-: தெற்காசிய நாடுகளிலிருந்து வருவோருக்கு 21 நாள் தனிமைப்படுத்தல்

வெற்-றிக் கிண்-ணத்-தோடு பிரியா விடை-பெ-றும் அகு-வேரோ மலே-சி-யா-: தெற்காசிய நாடுகளிலிருந்து வருவோருக்கு 21 நாள் தனிமைப்படுத்தல்

2 mins read
1d86af34-08f1-4cc2-b9e4-af06d6112dca
(இடது) இபி­எல் கிண்­ணத்தை வென்ற ஆனந்த கண்­ணீ­ரில் அதன் நிர்­வாகி பெப் கார்­டி­யோலா. (வலது) மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு­வில் இருந்து வெற்­றி­யோடு பிரியா விடை­பெ­றும் செர்­ஜியோ அகு­வேரோ. படங்­கள்: இபிஏ -
multi-img1 of 2

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் அன்­றாட கிரு­மித்­தொற்று சம்­ப­வங்

­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து 6,000த்திற்­கும் மேலா­கவே பதி­வாகி வரு­கிறது.

முழு முடக்க நிலை அறி­விக்­கப்­பட வில்லை என்­றா­லும், இன்று முதல் அங்கு கடை­கள், வர்த்­தக நிறு­வ­னங்­கள் செயல்­படும் நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

பெரும்­பா­லா­ன­வர்­கள் வீட்­டில் இருந்து வேலை செய்ய வேண்­டும் என்ற நடை­முறை கொண்டு வரப் பட்­டுள்­ளது.

சென்ற ஆண்டு கிரு­மிப் பர­வ­லின்போது, முழு முடக்க உத்­த­ர­வால், கிரு­மித்தொற்றை மலே­சியா வெற்­றி­க­ர­மாக கட்­டுக்­குள் கொண்டு வந்­தது.

ஆனால், மீண்­டும் ஒரு முழு­மை­யான நட­மாட்ட கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்­டால் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் பாதிக்­கப்­படும் என்­ப­தால் அத­னைச் செயல்­ப­டுத்த அர­சாங்­கம் மறுத்து வரு­கிறது.

கடந்த வாரத்­தில் மட்­டும் 362 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­னர். இது கடந்த ஆண்­டின் 11 மாதங்­களில் ஏற்­பட்ட மர­ணத்­திற்கு சமம்.

நேற்று மலே­சி­யா­வில் 6,509 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். 20 பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள் ஆவார்­கள்.

இதற்கிடையே நேப்­பா­ளம், பங்­ளா­தேஷ், பாகிஸ்­தான், இலங்கை ஆகிய நான்கு தெற்­கா­சிய நாடு­களில் இருந்து மலே­சி­யா­விற்கு வரு­வோர் 14 நாட்­க­ளுக்­குப் பதி­லாக 21 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்

­ப­டு­வர் என்­றும் அது உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரு­வ­தா­க­வும் மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று தெரி­வித்­தார்.

முன்னதாக இந்தியாவில் இருந்து வருவோர் மட்டும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

மற்ற நாடு­களில் இருந்து வரு­வோர் 10 நாட்­க­ளுக்­குப் பதி­லாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படு

வர் என்றும் அவர் சொன்னார்.

நடப்பு பரு­வத்­தின் கடைசி இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்து ஆட்­டங்­கள் நேற்று அதி­காலை நடை­பெற்­றன.

அப்­போது மான்­செஸ்­டர் சிட்டி குழு­வுக்­காக தான் விளை­யா­டிய கடைசி ஆட்­டத்­தில் செர்­ஜியோ அகு­வேரோ இரட்டை கோல் போட எவர்ட்­டனை 5-0 என்ற கோல் கணக்கில் அக்­குழு வென்­றது.

அகு­வேரோ பார்­சி­லோனா குழு­விற்கு செல்­வது கிட்­டத்­தட்ட முடி­வா­கி­விட்­ட­தாக சிட்டி நிர்­வாகி பெப் கார்­டி­யோலா கூறி­னார்.

இபி­எல் பட்­டி­ய­லில் 86 புள்ளி

களு­டன் இப்­ப­ரு­வத்­தின் வெற்­றிக் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது சிட்டி. இது கடந்த நான்கு ஆண்­டு­களில் அக்­குழு வென்ற மூன்­றா­வது இபி­எல் கிண்­ண­மா­கும்.

74 புள்­ளி­க­ளு­டன் 2வது இடத்­தைப் பிடித்­தது மான்­செஸ்­டர் யுனை­டெட்.

லிவர்­பூல், செல்சி முறையே 3வது, 4வது இடத்­தைப் பிடித்­த­தால் அவை சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்­குத் தகுதி பெற்­றன.

லெஸ்­டர் சிட்டி ஐந்­தா­வது இடத்­தில் முடிக்க, ஆறா­வது இடத்­திற்கு முன்­னே­றிய வெஸ்ட் ஹேம் குழு யூரோப்பா லீக்­கிற்­குத் தகுதி பெற்­றது.

டோட்­டன்­ஹம், ஆர்­ச­னல், லீட்ஸ், எவர்ட்­டன் குழுக்­கள் முறையே அடுத்­த­டுத்த இடங்­களில் இருந்­தன.