கொலம்பஸ், ஓஹையோ: கொலம்பஸ் நகருக்கு வெளியே நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் மாண்டதாக உள்ளூர் செய்தி ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்தது.
ஓஹையோ மாநிலத்தின் வெஸ்ட் ஜெஃபர்சன் கிராமத்தில் உள்ள இரட்டைக் குடியிருப்பு ஒன்றில் அருகில் பல உடல்கள் காணப்பட்டதாகவும் 'த கொலம்பஸ் டிஸ்பேட்ச்' என்னும் செய்தித்தாள் கூறியது.
வீட்டினுள் மூன்று உடல்களும் வெளியில் மேலும் சில உடல்களும் காணப்பட்டதாக உள்ளூர் தொலைக் காட்சி ஒன்று கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி திங்கட்
கிழமை மாலை 5.30 மணியளவில் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் கூறியது.
சுமார் 4,000 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தின் தலைமை போலிஸ் அதிகாரி கிறிஸ்டஃபர் ஃப்ளாய்ட் எனபவரை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இருந்தபோதிலும் மொத்தம் எத்தனை பேர் மரணமடைந்தனர், அவர்களின் பெயர் விவரம் என்ன, துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார், அதற்கான நோக்கம் என்ன என்பன குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
கொள்ளைச் சம்பவமா அல்லது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று திரு ஃப்ளாய்ட் அந்த தொலைக்காட்சியிடம் கூறினார்.

