தைப்பே: தைவானில் உள்ளூர் கிருமித்தொற்று எண்ணிக்கை பெருகி வருகிறது.
அங்கு நேற்று 542 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
பல மாதங்களாக தொற்று அபாயத்திலிருந்து தப்பித்து வந்த தைவானில் அண்மைய சம்பவங்கள் சவாலாக அமைந்து வருகின்றன.
புதிதாக உள்ளூரில் அதிகரித்து வரும் தொற்றும் சம்பவங்களைத் தொடர்ந்து தைவான் தனது கொவிட்-19 எச்சரிக்கைநிலையை ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. மக்கள் ஒன்றுகூடுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அந்த தேதி வரை தொடரும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகள் மே 28ஆம் தேதி வரை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது அவை நீட்டிக்கப்பட்டுள்ளன.

