சுய தனி-மைப்-ப-டுத்-த-லுக்கு ஆஸ்-தி-ரே-லியா அழைப்பு

சுய தனி-மைப்-ப-டுத்-த-லுக்கு ஆஸ்-தி-ரே-லியா அழைப்பு

2 mins read
a469ea6a-a6a0-4738-aa3e-edf19b5ac538
மெல்பர்னில் உள்ள கிருமித்தொற்று பரிசோதனைக் கூடத்திற்கு வெளியே காத்திருந்த மக்கள். படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நேற்று புதி­தாக காற்­பந்து ரசி­கர் உட்­பட ஆறு பேருக்­கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. இது கடந்த ஏழு மாதங்­களில் கண்­ட­றி­யப்­பட்ட ஆக அதி­க­ள­வி­லான அன்­றாட எண்­ணிக்­கை­யா­கும்.

கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட ஒரு­வர் மெல்­பர்­னில் நடந்த காற்­பந்­தாட்­டத்தை நேரில் கண்­டு

­க­ளித்­த­தை­ய­டுத்து, காற்­பந்து ரசி­கர்­கள் தங்­க­ளைத் தாங்­களே தனி­மைப்­ப­டுத்­திக்கொள்­ளு­மாறு ஆஸ்­தி­ரே­லிய காற்­பந்து லீக் அமைப்பு கேட்­டுக்கொண்­டுள்­ளது.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று மெல்­பர்ன் கிரிக்­கெட் மைதா­னத்­தில் நடை­பெற்ற உள்­ளூர் குழுக்

­க­ளுக்கு இடை­யி­லான காற்பந்தாட்­டத்­தைக் காண சுமார் 23,000 பேர் திரண்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வ­ருக்கு அரு­கில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காணும் பணி­யில் சுகா­தார அதி­கா­ரி­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­

க­ளுக்­குப் பிறகு சென்ற திங்­கட்­கி­ழமை கிரு­மித்­தொற்று அடை­யா­ளம் காணப்­பட்­ட­வு­டன் அடுத்த நாள் முதலே விக்­டோ­ரி­யா­வில் கட்­டாய முகக்­க­வ­சம், ஒன்­று­கூ­ட­லில் கலந்­து­கொள்­ப­வர்­க­ளுக்­கான எண்­ணிக்கை கட்­டுப்­பாடு போன்­றவை நடப்­புக்கு வந்­தன.

இருப்­பி­னும் கடு­மை­யான புதிய கட்­டுப்­பா­டு­கள் இல்­லா­மல் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது சிர­ம­மாக இருக்­கும் என்று ஆஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­கள் நேற்று எச்­ச­ரித்­த­னர்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளோடு நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளாக 300 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­களில் பலர் நெரி­சல்­மிக்க இடங்­க­ளுக்­குச் சென்­றி­ருந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.

"தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் முந்­திய தொற்று சம்­ப­வங்

களோடு தொடர்­பு­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது நல்ல விஷ­யம். ஆனால், அவர்­கள் எத்­த­கைய இடங்­க­ளுக்­குச் சென்­றார்­கள், எத்­தனை பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னார்­கள் என்­பது தெரியாதது கவ­லைக்­கு­ரிய விஷ­ய­மா­கும்," என்­றார் விக்­டோ­ரியா மாநில தற்­கா­லிக முதல்­வர் ஜேம்ஸ் மெர்­லினோ.

வெளி­நாட்­டி­லி­ருந்து சென்ற ஒரு­வர் தெற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தனி­மைப்­ப­டுத்­தல் முடிந்து, மெல்­பர்ன் திரும்­பிய ஆறு நாட்­க­ளுக்­குப் பிறகு, அவ­ருக்­குத் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. ஆனால் அது எவ்­வாறு பர­வு­கிறது என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க அதி­கா­ரி­கள் முயன்று வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, விக்­டோ­ரி­யா­வில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்­குத் தெற்கு ஆஸ்­தி­ரே­லியா தடை விதித்­துள்­ளது.