பெய்ஜிங்: உலகின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியல் நாடாக சீனா விளங்குகிறது. அதன் அதிபர் ஸி ஜின்பிங் நாட்டை தனது தீவிரப்பிடியில் இறுக்கி வருகிறார்.
இந்த நிலையில் சீனாவிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கும் காலகட்டத்தில் அமெரிக்கா நுழைவதாக வெள்ளை மாளிகையின் ஆசியாவுக்கான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பல் கலைக்கழகமான ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்கான பாதுகாப்பு மன்றத்தின் அமெரிக்க ஒருங்கிணைப் பாளர் குர்ட் கேம்பல், "சீனாவு டனான ஒத்துப்போகும் காலம் முடிந்துவிட்டது," என்றார்.
சீனாவுக்கான அமெரிக்காவின் கொள்கை இனி புதிய உத்திகளின் அடிப்படையில் இருக்கும். இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கொள்கை மாற்றத்திற்கு சீன அதிபரின் கொள்கைகளே காரணம் என்று திரு கேம்பல் மேலும் கூறினார்.
இந்தியாவுடனான சீன எல்லையில் நடந்த ராணுவ மோதல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சீனா மேற்கொண்டுள்ள பொருளியல் பிரசாரம், மற்ற நாடுகளை அச்சுறுத்தும் அரசதந்திரம் போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
பெய்ஜிங்கின் நடத்தைகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. அதில் அந்நாடு உறுதியாக இருப்பதையும் அறிகுறிகள் காட்டு வதாக திரு கேம்பல் குறிப்பிட் டார்.
இரு நாடுகளுக்கு இடையே புதிய பதற்றத்துக்கான அறிகுறிகள் தென்படும் வேளையில் சீனாவுக்கு எதிராக திரு கேம்பல் கடுமையாகப் பேசியுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாயும் சீனாவின் துணைப் பிரதமர் லியூ ஹியும் முதல் முறையாக தொலைபேசியில் பேசியுள்ளனர்.
முன்னதாக ராட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டாய், இரு தரப்பினரும் பெரிய அளவிலான சவால்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.
இவ்வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், கொவிட்-19 கிருமி தோன்றிய இடத்தைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து அந்தக் கிருமி கசிந்து வெளியேறியதா என்பதைக் கண்டுபிடிக்குமாறு உளவுத்துறை அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவியதாகக் கூறப்படும் கொவிட்-19 கிருமி, உலகம் முழுவதும் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது.
மில்லியன் கணக்கான மக்கள் மடிந்துவிட்டனர். உலக நாடுகளின் பொருளியலும் அடிமட்டத்துக்குச் சரிந்துள்ளது.
நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், போக்குவரத்து பாதிக்கப் பட்டு உள்ளதால் உலக மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக் கின்றனர். அந்தக் கிருமி உலக மக்களின் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.
கிருமிப்பரவலால் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.

