பேங்காக்: பேங்காக்கில் உள்ள மளிகைக் கடையில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பாட் (S$847,000) மதிப்புள்ள கள்ள நோட்டுகள் வைத்திருந்ததாக ஒரு பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.
பொருளியல் குற்றச்செயலுக்கு ஆளான அந்தப் பெண்ணின் பெயர் அனான்யா, 41 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாணய மாற்று வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர் ஒருவருக்கு பெரும் தொகையிலான சிங்கப்பூர் டாலரை விற்க முயற்சி செய்தபோது அவர் பிடிபட்டார் என்று பேங்காக் போஸ்ட் தெரிவித்தது.
சந்தேக நபர் வைத்திருந்த பையில் 10,000 சிங்கப்பூர் வெள்ளி போலி நோட்டுகளின் 74 இருந்தன. இதன் மதிப்பு 17 மில்லியன் பாட். அதிகாரிகள் கைப்பற்றியதும் போலி நோட்டுகள் தன்னுடையது என்று கூறிய பெண் குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.
கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து மேலும் 100 யுஎஸ் டாலர் நோட்டுகளாக 296,000 பாட் மதிப்புள்ள நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண் மீது போலி நோட்டுகளைக் கொண்டு மோசடி செய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் என்று போலிசார் தெரிவித் தனர்.