பெய்ஜிங்: சீனாவில் ஆஸ்திரேலியர் மீதான உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியக் குடிமகனான யாங் ஹெங்ஜுனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் சீன அதிகாரிகள் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றது. நீதிமன்றத்தில் நுழைய முயன்ற ஆஸ்திரேலியத் தூதர் தடுத்து நிறுத்தப்பட்டார். யாங்கின் உறவினர்கள் அளித்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த வழக்கில் அரசு ரகசியங்கள் அடங்கியிருப்பதால் பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை என்று சீனா கூறிஉள்ளது. ஆனால் வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறவில்லை என்று ஆஸ்தி ரேலிய தூதர்கள் தெரி வித்துள்ளனர்.
இது மிகவும் வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாக சீனாவுக்கான ஆஸ்தி ரேலிய தூதர் கிரஹம் ஃபிலட்செர் நீதிமன்றத்துக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டாக்டர் யாங் கல்விமான் ஆவார். சீனாவின் விவகாரம் தொடர்பில் வலைப்பதிவில் அவர் எழுதி வந்தார். அனால் அண்மைய ஆண்டுகளாக சீன அரசாங்கத்தை நேரடியாக விமர்சித்து வந்தார்.
இதையடுத்து 2019ல் சீனாவில் யாங் கைது செய்யப்பட்டார்.

