மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் வசிக்கும் இரண்டாவது மாநிலமான விக்டோரியாவில் ஒரு வாரம் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மெல்பர்னில் கொவிட்-19 கிருமி அதிவேகமாகப் பரவுவதால் வியாழன் (நேற்று) நள்ளிரவு முதல் ஒரு வாரத்திற்கு முடக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
இதுவரை 26 தொற்றுச் சம்பவங்களை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 150 கிருமிப் பரவும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு 2வது அலை ஏற்படுத்திய பாதிப்பை விக்டோரியா மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. இந்நிலையில் புதிய கிருமிப் பரவலால் பலர் அச்சமடைந்துள்ளனர்.
விக்டோரியாவின் இடைக்கால முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ, அதிவேகமாகப் பரவக்கூடிய உருமாறிய பி.1.617 கிருமியால் தொற்று அதிகரித்துள்ளது என்றார்.
ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய பயணி ஒருவர் அத்தகைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற அவர், எதிர்பாராத வேகத்தில் தொற்று பரவியதாகவும் கூறினார்.
காற்பந்துப் போட்டி நடந்த மெல்பர்ன் அரங்கம் உட்பட மாநிலம் முழுவதும் பல இடங்களுக்கம் புதிய தொற்றுச்சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஏறக்குறைய 10,000 சம்பவங் களில் கிருமித்தொற்றுக்கான தொடர்பு இருக்கிறது. விக்டோரியா மாநிலத்தைச் சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட கிருமிப்பரவும் குழுமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
"இப்போதே செயல்பட்டாக வேண்டும். இதற்கு மேலும் காத் திருந்தால் எல்லை மீறிப் போய்விடும்," என்று ஜேம்ஸ் மெர்லினோ கூறினார். கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விக் டோரியாவில் 26 சம்பவங்களே பதி வாகியுள்ளன. ஆனால் 10,000க்கும் மேற் பட்டோருக்குத் தொற்று ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

