கோலாலம்பூர்: மலேசியாவில் முழு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் 14ஆம் தேதி வரையில் நாடு முழு வதும் அனைத்து சமூக, பொரு ளியல் நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
நேற்று மற்றோர் உச்சமாக ஒரே நாளில் 8,290 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான பொருளியல் மற்றும் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே நாட்டின் ஆகப் பெரிய தடுப்பூசி நிலையம் விரை வில் செயல்படுவதற்கான நடவடிக் கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையம், இம்மாதம் 31ஆம் தேதியிலிருந்து செயல்படும்.
முதலில் 2,600 மூத்த குடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும் என்று அரசு தெரிவித்தது.
கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியில் செகமாட்டில் உள்ள மலேசிய அனைத்துலக வர்த்தக, கண்காட்சி மண்டபத்தில் (Mitec) புதிய தடுப்பூசி நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் பரப்பளவு 51,000 சதுர மீட்டர். ஒரே நாளில் 5,000க்கும் மேற்பட்டோருக்கு இங்கு தடுப்பூசி போட முடியும். பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை 8,000க்கு அதிகரிக்கப்படும் என்று 'மைடெக்'கின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியான மாலா துரைசாமி தெரிவித்தார்.
"உடற்குறையுள்ளோருக்கு 'மைடெக்' தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தும்," என்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.
கொவிட்-19 விதிமுறைகளும் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதை ஊழியர்கள் உறுதி செய்வார்கள் என்று கூறிய மாலா துரைசாமி, முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றார்.
தடுப்பூசிக்கு முன்பதிவு செய்த வர்கள் தடுப்பூசி போடாமல் பின்னர் தடுப்பூசி நிலையங்களில் புதிய தேதிக்குப் பதிவு செய்யாமல் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற் பட்டது.
ஆனால் புதிய தடுப்பூசி நிலையத்தில் ஒரே ஒரு நுழை வாயிலும் ஒரே ஒரு வெளியேறும் பாைதயும் மட்டுமே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.