ஹாங்காங் தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு தண்டனை கூடுகிறது

ஹாங்காங் தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு தண்டனை கூடுகிறது

2 mins read
e2179995-19b6-464d-ad79-184c7840b10e
பிப்ரவரியில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜிம்மி லாய். கோப்புப் படம்: இபிஏ -

ஹாங்­காங்: ஹாங்­காங்­கின் ஜன­நா­யக ஆத­ரவு போராட்­டக்­கா­ர­ரும் தொழி­ல­தி­ப­ரு­மான ஜிம்மி லாய்க்கு மேலும் 14 மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2019 அக்­டோ­பர் 1ஆம் ேததி சட்­ட­வி­ரோ­த­மாகக் ­கூ­டி­ய­தாக அவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்டது.

அவ­ரு­டன் இதே குற்­றத்­திற்­காக மேலும் ஒன்­பது பேர் தண்­டிக்­கப்­பட்­ட­னர்.

நேற்று தண்­டனை விதிக்­கப்­பட்ட பத்து பிர­பல ஜன­நா­ய­கப் போராட்­டக்­கா­ரர்­களில் லாயும் ஒரு­வர்.

ஃபிகோ சான், 'நீள­முடி' என்று அழைக்­கப்­படும் லுவங் குவோக்-ஹங், லீ சியுக் யான் ஆகி­யோ­ரும் தண்­டனை பெற்ற பத்து பேரில் அடங்­கு­வர். இவர்­க­ளுக்கு 18 மாதங்­கள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. லுவங்­கும் லீயும் ஏற்­கெ­னவே சிறை­யில் அடைக்­கப்­பட்டு தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­ற­னர்.

திரு லாய்க்கு, வயது 73, இதே போன்று 2019 ஆகஸ்ட் 18, 31ஆம் தேதி­களில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கூடி­ய­தற்­காக இம்­மா­தம் 14 மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யில் இருந்து வரு­கி­றார்.

தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் கடந்த டிசம்­ப­ரி­லி­ருந்து சிறை யில் அடைக்­கப்­பட்ட அவர், பல முறை பிணை­யில் விடு­விக்க கோரிக்கை விடுத்­தார். ஆனால் அவ­ரது கோரிக்கை நிரா­க­ரிக்­கப் பட்­டது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் சீனா அறி­மு­கப்­ப­டுத்­திய புதிய சட்­டத்­தின் கீழ் மூன்று குற்­றச்­சாட்­டு­களை லாய் எதிர்­நோக்­கு­கி­றார்.

வெளி­நாட்­டு­டன் சேர்ந்து கூட்டு சதி­யில் ஈடு­பட்­டது அவற்­றில் ஒன்று.

இதற்­கி­டையே தொழி­ல­தி­பர் லாயை மீண்­டும் மீண்­டும் சிறை­யில் அடைப்­பதை மேற்­கத்­திய நாடு­களும் மனித உரிமை அமைப்­பு­களும் குறை­கூ­றி­யுள்­ளன.

ஹாங்­காங் மக்­க­ளின் சுதந்­தி­ரம் நசுக்­கப்­படுவதாக அவை தெரி­வித்­தன.